13/03/2024

கொள்கையின் பேரினில்

 


கொள்கையின் பேரினில் கொள்ளை அடிப்பவர்
கொள்ளை அடிக்கவே கொள்கையைத் துறக்கிறார்....

நல்லவர் போலவே நம்மவர் என்பவர்
வல்லவர் வாழவே மையமாய் நகர்கிறார்....

சிறுத்தையைப் போலவே சீறிடும் வித்தகர்
இருப்பதைக் காக்கவே ஈவதை ஏற்கிறார்...

சமத்துவம் தேடிய சாதனை நாயகர்
சமுத்திரப் பாதையில் ஓடையை இணைக்கிறார்...

கூட்டணி அமைப்பதில் குழப்பம் நிறைந்தவர்
போட்டியில் வெற்றியை எதிரிக்குத் தருகிறார்....

✍️செ. இராசா

No comments: