12/03/2024

மெட்டு: மாங்குயிலே....காலமுள்ள காலம்வரை


*பல்லவி*

காலமுள்ள காலம்வரை மானத்துடன் வாழ
ஆளுகிற ஆட்சியினை நாம்தொடர வேணும் ....(2)
முத்து வேலர் கருணா நிதி
பெத்த பிள்ளை பாரம்மா...

காலமுள்ள காலம்வரை மானத்துடன் வாழ
ஆளுகிற ஆட்சியினை நாம்தொடர வேணும்..

*சரணம்_1*

எட்டி எட்டி மேல வந்த எங்க தல சிங்கம் அவர்...
எள்ளளவும் குறை களில்லா சுத்தமான தங்கம்...

தப்பு தண்டா செஞ்ச வர்க்கு எப்போதுமே நெருப்பு -ஐயா
நட்பப் போல கண்ண வச்சு
காப்பதவர் பொறுப்பு...

சாதி மதத்தால் பிரிக்க நினைச்சா
சட்டம் ஒழுங்க கெடுக்க நினைச்சா
ஹிந்தி மொழிய திணிக்க நினைச்சா
நம்ம மொழிய அழிக்க நினைச்சா

வால ஒட்ட நறுக்கு ஐயா
நம்மில் இல்லை வெறுப்பு
வாழ வந்தா சிறப்பு இல்லை
இங்கே இல்லை இருப்பு

நித்தமும் பொய்களைச் சொல்லிடும் பேர்களின்
அத்தனை வேசமும் சீக்கிரம் நீங்கிடும்
காலமுள்ள காலம்வரை மானத்துடன் வாழ
ஆளுகிற ஆட்சியினை நாம்தொடர வேணும்..

*சரணம்-2*

உண்மை நிலைச்சு நிக்க உயிர் கொடுக்கும் தலைவன் அம்மா
நன்மை கிடைக்கனும்னு தினம் நினைக்கும் தலைவன்
வள்ளுவரு சிலையை வச்ச கலைஞரோட புதல்வன் ஐயா
தெள்ளுதமிழ் நிலைக்க வச்ச
கழகத்தோட முதல்வன்
கூடியிழுப்போம் வெற்றிக் கனிய
சொல்லி அடிப்போம் டெல்லிப் பணிய
நாளை எண்ணித்தான் நாளும் உழைப்போம்
பார்வை ஒன்றில்தான் பாதை அமைப்போம்

நாற்பதிலும் நாமே யம்மா
வெல்லவேணும் தானே
மோதிடுவோர் வீணே யம்மா
வீழவேணும் தானே
மாலைய எடுத்துப் போடனும் உமக்கு
நம்மோட கணக்கு மொத்தமும் நமக்கு

No comments: