அடிக்கும் பறையொலி
துடிக்கும் துடும்பொலி
வெடிக்கும் விசிலொலி கேளு- நீ
வெடிக்கும் விசிலொலி கேளு- ஏய்
அரங்கமே அதிருது பாரு- நாம்
அடிச்சது புது வரலாறு- இந்த
அகிலமே அசருது பாரு- நாம்
படைச்சது புது வரலாறு...
செ. இராசா
அடிக்கும் பறையொலி
துடிக்கும் துடும்பொலி
வெடிக்கும் விசிலொலி கேளு- நீ
வெடிக்கும் விசிலொலி கேளு- ஏய்
அரங்கமே அதிருது பாரு- நாம்
அடிச்சது புது வரலாறு- இந்த
அகிலமே அசருது பாரு- நாம்
படைச்சது புது வரலாறு...
செ. இராசா
அஃறிணைக்குத் திரும்பாமல்
உயர்திணைக்கே உயர்த்தும்
ஏணிப்படி..
சினத்தால் சிதையாமல்
சிரிப்பால் ஆற்றிவிடும்
மருந்து..
கவலையெனப் பதறாமல்
கழிந்ததென அமைதிதரும்
கழிவு..
வஞ்சத்தை வளரவிடாமல்
நஞ்சென அறுத்தெறியும்
கத்தி..
சிலுவையில் அறைந்தாலும்
பாவிகளுக்காய் வருந்தும்
கடவுள்..
ஆம்...
மன்னித்துப்பார்
நீயும் கடவுளாவாய்....!!!
செ. இராசா
காத்திருந்து கச்சிதமாய்க்
......கவ்வுகின்ற கொக்கைப்போல்
நேர்த்தியுடன் காத்திருந்தால்
......வெற்றிபெறல்- சாத்தியமே
எண்ணுகின்ற எண்ணம்போல்
......எல்லாமும் கிட்டுவதால்
திண்ணமுடன் ஒன்றியதைத்
......தேடு
செ. இராசா
பல்லவி
பதறுது பதறுது மனசு.....இந்தப்
பனியிலும் எரியுது உசுரு...
கதறுது கதறுது இரவு....எந்தன்
கனவிலும் கதறுது உலகு..
.....இதுயென்ன மாயை
.....யார்செய்யும் வேலை
.....தெரியலை தெரியலை எனக்கு!
.....புதுவித போதை.
.....போகின்ற பாதை
.....புரியலை புரியலை கணக்கு!
பதறுது பதறுது மனசு.....இந்தப்
பனியிலும் எரியுது உசுரு...
கதறுது கதறுது இரவு....எந்தன்
கனவிலும் கதறுது உலகு..
சரணம்-1
மனிதர்கள் மட்டும் வாழ்ந்திடவா
புவியினை இறைவன் படைத்துள்ளான்...
மிருகமும் பறவையும் அழிந்திடவா
மனிதனுள் சுயநலம் விதைத்துள்ளான்...
இயற்கையின் சங்கிலி உடைந்திடும் என்றால் எப்படி உலகம் மீண்டிடுமோ?
முயற்சியின் பாதையில் தடைவரும்
என்றால் எப்படி இதயம் தாங்கிடுமோ?
பதறுது பதறுது மனசு.....இந்தப்
பனியிலும் எரியுது உசுரு...
கதறுது கதறுது இரவு....எந்தன்
கனவிலும் கதறுது உலகு..
சரணம்_2
தக்கனப் பிழைக்கும் தத்துவமே
டார்வினின் தியரி என்கின்றார்!
இக்கணம் இருக்கும் உயிரினத்தை
இவர்களே இன்னும் அழிக்கின்றார்!
காட்டினுள் கட்டிடம் புகுந்திடும் என்றால்
மிருகங்கள் எப்படி வாழ்ந்திடுமோ?
ஏட்டினில் சோறென எழுதுவோம்
என்றால்
பசிப்பிணி இங்கே பறந்திடுமோ?
பதறுது பதறுது மனசு.....இந்தப்
பனியிலும் எரியுது உசுரு...
கதறுது கதறுது இரவு....எந்தன்
கனவிலும் கதறுது உலகு..
செ. இராசா
பல்லவி
பாதையை வகுத்தவரு
திருமா அண்ணன் பண்புல ஜெயிச்சவரு!
சாதனை படைச்சவரு
திருமா அண்ணன் சமத்துவம் விதைச்சவரு!
அனைவரும் சரிசமங்க
உண்மை இதை;
உலகமே உணரணுங்க...
உரிமைக்குக் குரல்கொடுங்க
ஒற்றுமையில்;
வெல்வது சுலபமுங்க...
சரணம்-1
அண்ணன் ஏதும் கேட்டா; ஆளும்
அரசும் மதிப்பு கொடுக்கும்..
உண்மை மாத்தி சொன்னா; அண்ணன்
மீசை முறுக்கில் அடங்கும்..
அடிமைத் தளையை ஒட்ட
அறுக்க நினைக்கும் எங்க
திருமா அண்ணன் வாழ்க!
பொறுமைக் கலையைக் கற்ற
போதி தர்மன் எங்கள்
அரிமா இவரு தாங்க!
நம்ம அண்ணல் போட்ட பாதை
அது அண்ணன் போகும் பாதை (2)
சரணம்-2
கல்விப் புரட்சி செய்ய: நல்ல
திட்டம் இங்கே வேணும்
நல்ல வழியைக் காட்ட; நாமும்
மேல ஏறி வரணும்...(2)
தமிழை ஒதுக்க எண்ணி
வினைகள் புரிய எண்ணும்
கூட்டம் ஒடுங்க வேணும்!
நிமிர்ந்த நடையில் நின்று
நினைவில் தெளிவு கொண்டு
வென்று காட்ட வேணும்
நம்ம அண்ணல் போட்ட பாதை
அது அண்ணன் போகும் பாதை (2)
செ. இராசா
சரணம்-2
தாரை வார்த்துதந்த தமிழ்நாட்டின் கட்சத்தீவ
தானைத் தலைவர் தானே மீட்டெடுக்கப் போராரு ...
தண்ணீர் பிரச்சினைய சுத்தமாகத் தீர்த்துவைக்க
தங்கத் தலைவர் இங்கே எழுச்சி கொண்டு வாராரு ...
தொகுதி முழுவதுமே சுற்றிவரும்
தலைவரோட
தகுதி அறியாம ஒதுக்கிவச்ச எதிரிகளை
...
கொட்டம் அடங்கும்படி கூறுகின்ற தேர்தலுல
நட்டம் நமக்கில்லை நடக்குறதப் பாருங்க...
யாரு யாரு யாரு இங்கே ஜெயிக்கிறது யாரு...
வேற யாரு நம்ம ஐயா
ஓபிஎஸு பாரு...
யாரு யாரு யாரு சின்னம் ஜெயிக்குமுனு கூறு...
தாறு மாறு வெற்றிதரும்
பலாப்பழம் பாரு..
உங்கள் சின்னம் பலாப்பழம்
எங்கள் சின்னம் பலாப்பழம்
வெல்லும் சின்னம் பலாப்பழம்
நமது சின்னம் பலாப்பழம்...
இறக்கையில் யாரழுவார்
.....என்கின்ற நூலை
இறக்கும்முன் வாசியுங்கள்
.....என்பேன்- மறவாதீர்!
ஆங்கிலநூல் ஆனாலும்
.....ஐநூறில் பாதிதான்
வாங்குங்கள் கட்டாயம்
.....வந்து!
செ. இராசா
நூல்: Who will cry when you die?
விலை: #235