09/04/2024

மன்னிப்பு

அஃறிணைக்குத் திரும்பாமல்
உயர்திணைக்கே உயர்த்தும்
ஏணிப்படி..

சினத்தால் சிதையாமல்
சிரிப்பால் ஆற்றிவிடும்
மருந்து..‌

கவலையெனப் பதறாமல்
கழிந்ததென அமைதிதரும்
கழிவு..

வஞ்சத்தை வளரவிடாமல்
நஞ்சென அறுத்தெறியும்
கத்தி..

சிலுவையில் அறைந்தாலும்
பாவிகளுக்காய் வருந்தும்
கடவுள்..

ஆம்...
மன்னித்துப்பார்
நீயும் கடவுளாவாய்....!!!

✍️செ. இராசா

No comments: