கருத்துக் கணிப்பா?
.....கருத்துத் திணிப்பா?
வருமா? திரும்ப
.......வராதா? - ஒருவழியாய்
ஏற்றம் எவருக்கோ
.......ஏமாற்றம் யாருக்கோ?
மாற்றம் தருமாமே
........நாலு!?
இந்த வெண்பாவில் ஈற்றடியில் ஒரு சிறப்பு உள்ளது. இருமுறை படிக்கவும்
அறியாமை யாதெனெ ஆராயா தன்மை
அறியாமை என்றே அறிக- அறிந்தே
அறிந்ததாய்ப் பேசும் அறிவிலி கண்டால்
அறிந்ததைப் பேசா(து)அகல்.
Costly கவிஞர் கமல்ஹாசன்தான்...
ராஜ்யசபா சீட்டுன்னா சும்மாவா..
அவர்பாட்டுக்கு இருந்தவர
அவர் பாட்டுக்கு பாட வச்சுட்டாங்கல்ல...![]()
![]()
ஆவியில் வெந்தபின்னர்
......அப்படியே போட்டறைத்துத்
தூவிடும் உப்பைத்
........துணையாக்கி- பாவித்தால்
நற்சுவையாய் நாவிற்கும்
.....நன்மருந்தாய் ஊனிற்கும்
அற்புதமாய் உள்ளதென்பீர்
.....ஆய்ந்து!
.
செ. இராசா