29/05/2026

பழகுகின்ற நட்பெல்லாம்

 

பழகுகின்ற நட்பெல்லாம்
....பாராமல் போனாலும்
அழகுமிகு சுற்றமெல்லாம்
...அற்பமெனப் போனாலும்
பழம்முதிர்ந்த சோலையெல்லாம்
....பாலையெனப் போனாலும்
சுழலுமந்த ஆதிவிட்டு
....சுத்தவெளிப் போகுமோ?!
✍️செ. இராசா.

27/05/2026

அறிய அறிய அறிவதென்ன

 

அறிய அறிய அறிவ தென்ன
....அறிந்த தொன்றும் இல்லையே!
அறிந்த தாக உணர்வ தெல்லாம்
....அறிவி லாதோர் செய்கையே!
அறிவின் ஆழம் அகலம் தேடி
....அறிய முயலும் எண்ணமே
அறிவைக் கூட்டி அமைதி யாக்கி
....அறிவின் உச்சம் காட்டுமே!
✍️செ. இராசா

24/05/2026

போனதெல்லாம் போனதென்று

 

போன தெல்லாம் போன தென்று
....போக்கை மாற்றி வந்திடு!
ஆன தென்ன ஆவ தென்ன
....ஆழ்ந்து நோக்கிக் கற்றிடு!
ஞான மென்ன மூட மென்ன
.....மாறு பாட்டைக் கண்டிடு!
வான மென்ன பூமி யென்ன
.... வைய யெல்லாம் வென்றிடு!
✍️செ. இராசா

22/05/2026

ஊதப்போறான் சங்குதான்

 

செட்டிங் பண்ணி ஜெயிச்சிட்டதாக் கூவுறான்- இவன்
பெட்டிங் கட்டித் தோத்ததால நோவுறான்!
தந்தா னக்கு தனக்கு னக்கு சாங்குதான்- நீ
வேணாப் பாரு ஊதப்போறான் சங்குதான்!

17/05/2026

கறிவேப்பிலை

 

என்னதான்...
மணமணக்க வைத்தாலும்
ருசியைக் கூட்டிக்கொடுத்தாலும்
இத்தனை பலன்களென்று
கூகுளே கொட்டினாலும்
இங்கே ஒதுக்கிவிடுவோர்
எப்போதும் உண்டுதானே?!
அட..
இதற்கெல்லாமா கவலைப்படும்
அந்தக் கறிவேப்பிலை?!!

✍️செ. இராசா 

13/05/2026

தற்குறி தற்குறி என்றீர்

 


தற்குறி தற்குறி என்றீர்!
ஆம் தற்குறிதான்!
தன் குறி தவறாது
தட்டித் தூக்கியதால்
அவர்கள் தற்குறிதான்!

அலையில்லை அலையில்லை என்றீர்!
ஆம் அலையில்லைதான்!
சுனாமி எழும்முன்
சின்னச் சின்ன அலைகளுக்கு
வேலை இல்லைதான்!

டெல்லி டெல்லியென்று கூவினீர்!
டெல்லி வரவில்லைதான்!
விஜய் என்னும்
சென்னைப் பெருவெள்ளம்முன்
டெல்லிக்கு இடமில்லைதான்!

அணில் குஞ்சென்று நக்கல் செய்தீர்!
ஆமாம் அணில்குஞ்சுகள் தான்!
ராமர் பாலம்கட்ட உதவியதுபோல்
விஜயை அரியணை ஏற்ற உதவிய
அதே அணில் குஞ்சுகள்தான்!

கூட்டம் ஓட்டாகாது என்றீர்!
அதுயென்னவோ உண்மைதான்!
காசுக்கு கூட்டிய கூட்டமெல்லாம்
கானலாய் போகுமெனில்
வெறும் கூட்டம் ஓட்டாகாதுதான்..

பணம் பாதாளம்வரை என்றீர்!
பார்த்தீர்கள் தானே?!
ஜன நாயகம் வெகுண்டால்
பண நாயகம் என்னாகுமென்று?!

✍️செ. இராசா

12/05/2026

ஒவ்வொரு செயல்களுமே பதிகிறதே

 

ஒவ்வொரு செயல்களுமே பதிகிறதே
பதிவெல்லாம் விளைவாக வருகிறதே
ஒவ்வொரு கணங்களுமே* முக்கியமே
முறையாக செயல்யாவும் புரியனுமே..
ஐவகைக் கடமையை* நாளும் நம் வாழ்வில்
சரிவர செய்கிற போதில் அதுபோதும்
கணமே இக்கணமே என செய்துவிடு
குணமே நற்குணமே என மாறிவிடு...
✍️செ.இராசா
கணங்கள்: Each and every moment
ஐவகைக் கடமை- தான், குடும்பம், சுற்றம், ஊர் & உலகம் என ஐந்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள்

10/05/2026

சொல்வதென்ன செய்வதென்ன?

 


சொல்வ தென்ன செய்வ தென்ன?
....சுட்டும் அந்த* உள்ளமே;
சொல்லை மாற்றிச் செய்தி டாத
....சுத்தம் சொல்லில் வேண்டுமே!
அல்ல லில்லா செய்கை செய்ய
.... அல்லல் தூரப் போகுமே!
நல்ல செய்கை செய்ய செய்ய
.....நன்மை கோடிப் பாயுமே!
#அந்த என்றால் அந்த/ அறுந்த போன/ இறுதி என பலபொருள்கள் வரும். அனைத்தும் இங்கே பொருந்தும்.
✍️செ. இராசா

08/05/2026

பொய்பொய்யா பொய்பொய்யா

 

பொய்பொய்யா பொய்பொய்யா
போடுறாங்க நியூசு.
போனத் தொறந்தாலே
பொசுபொசுங்குது
ஹைஃபையா சைஃபையா (HiFi/Sci-Fi))
பேசுறாங்க பேச்சு
பேச்சக் கேட்டாலே
அருவருக்குது
இல்லாதத பொல்லாதத சொல்லாத
சொல்லாதத சொன்னாலுமே நம்பாத..
இல்லாதத பொல்லாதத சொல்லாத
சொல்லாதத சொன்னாலுமே நம்பாத..
போலியாக போடுறாங்க வீடியோ - போட்டு
பொதுஜனத்தைக் குழப்புறாங்க பார்த்தியோ
காசவாங்கிக் கதைப்பதுதான் ஜோலியோ?- அப்ப
கண்டயிடம் மலந்திங்கப் போவியோ?
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
கொய்யால இவன்
......திருந்த மாட்டான் மாமு..
பொய்யாக இவன்
.....விதைச்சதெல்லாம் கேமு..
முன்னாலசெய்ய
.....பின்னால வரும் நோவு
என்னாகுமினி
.....தன்னாலநொந்து சாவு
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ

03/05/2026

பாவிகள் மீள முடியுமா

 

ஊரென்ன சொன்னாலும்
.....உலகென்ன சொன்னாலும்
.....உண்மையை மாற்ற முடியுமா?
யாரென்ன செய்தாலும்
......இனியென்ன தந்தாலும்
.......ஈன்றதை மறுக்க முடியுமா?!
நீரென்ன வைதாலும்
.......நிகரில்லை என்றாலும்
.......நேர்வதைத் தடுக்க முடியுமா?
பாரெங்கு போனாலும்
.......பலகோவில் சென்றாலும்
.......பாவிகள் மீள முடியுமா?

கதறு கதறு

 

அழுதா மன அழுத்தமெல்லாம் போகுமா... அதனால் அழு மச்சி..
ஆனால்..அப்படிலாம் அழ விட்றுவமா?
கதறுடா...
கதறு கதறு கதறு கதறு கதறு கதறு கதறு - நீ
கதறு நீ கதறு நீ கதறுடா
எத்தனை எத்தனை சீனுடா
இதுக்கு உனக்கு வேணுன்டா
சத்தமாக் கத்துன பாருடா
வச்சான் பாரு ஆப்புடா
ஆட்டம் போட்ட ஆளுடா
அடங்கி போக வேணுன்டா
கூட்டம் போட்டு கூவுடா
முடிஞ்சு போச்சு ஜோலிடா
கதறு கதறு கதறு கதறு கதறு கதறு கதறு - நீ கதறு நீ கதறு நீ கதறுடா
யம்மாம் பெரிய ஆளு எல்லாம்
சும்மா கெடக்குறான்- இவன்
தம்மாத் துண்டு மேட்டருக்கே
ஃபிலிமு காட்டுறான்
உருட்டு மேல உருட்டு போட்டு
நல்லா உருட்டுறான்- அட
உசரத்துக்கு வர்றவன
ஏன்யா தடுக்குறான்..
வாட்சப்புல வர்றதெல்லாம் ஷேரு பண்ணாத
நோஷ்கட்டாகி போனபின்னே ஃபீலு பண்ணாத
இன்ஸ்டாவுல பார்த்துபுட்டு முடிவு பண்ணாத
யானைக்கிமே அடிசறுக்கும் மறந்து விடாத
See less
Shared post

01/05/2026

படிக்கும் பழக்கத்தைப் பற்று

 

முடிக்கத் தெரிந்தவரை
.....முன்னேற்றி விட்டுத்
துடிப்போடு செல்வீர்
......தொடர்ந்து- முடிந்தால்
குடியைக் கெடுக்கும்
......குடியை ஒதுக்கி
படிக்கும் பழக்கத்தைப்
.......பற்று!