28/03/2026

சொன்ன வார்த்தைதான்

 

கொஞ்சும் குரலாகவும்
உரிமைக்கான அதிகாரமாகவும்
அப்போதெல்லாம்
மூச்சுக்கு முந்நூறு தடவை
சொன்ன வார்த்தைதான்
இப்போது வர மறுக்கிறது...
அப்பா என்று...

நீலாங்கரை மாமு

 

நீலாங்கரை மாமு ஏய்
நீலாங்கரை மாமு...
ஓலாவுல வரட்டா- வந்து
ஃபீலா ஒன்னு தரட்டா..(2)
அம்சிக்கரை பேபி ஏய்
அம்சிக்கரை பேபி..
ஐயம் வெரி சாரி- நான்
சுத்த பிரம்மச்சாரி...(2)

25/03/2026

ஒரு கல்யாண மாப்பிள்ளை

 







உறையூர் வெக்காளியம்மனை மனதார வேண்டிவிட்டு அப்படியே வயலூர் முருகன் கோவில் சென்று வந்தோம். இரண்டு கோவில்களிலுமே மிகவும் அற்புதமான தரிசனம் கிடைத்தது. குறிப்பாக வயலூர் முருகன் கோவிலில் சாமிகும்பிட்டுவிட்டு வெளியே வந்தால் யாரென்றே தெரியாத ஒரு கல்யாண மாப்பிள்ளை எங்களைக் கூட்டிக் கொண்டுபோய் சாப்பாடு போட்டார். தெரிந்தவர்களுக்குப் போடுவது வேறு. யாரென்றே தெரியாதவர்களை அழைத்து விருந்தோம்பல் செய்வதெல்லாம் நம் பாரம்பரியத்தில் இன்னும் இருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. (மொய் அன்பளிப்புகூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). மாப்பிள்ளை மணப்பாறையைச் சேர்ந்தவராம். தீவிர சிவ பக்தர். அருள் தொண்டில் மனம் மகிழும் அற்புத நபர். அவர் எல்லாம் வளமும் பெற்று நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.
நீங்களும் வாழ்த்துங்கள் உறவுகளே...
வாழ்க பல்லாண்டு!

ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா

 


ஆள மாத்தி ஆள எக்ஸ்சேஞ்சு பண்ணுறான்
கால வாரி விட்டு கர்ணன்போல் பேசுறான்
மாடி வீட்டத் தந்தா பாராக மாத்துறான்
கூடி சேர்ந்து நல்லா கும்மாளம் போடுறான்
OT பேரச் சொல்லி ஊரெல்லாம் சுத்துறான்
Dirty shirtaப் போட்டு செண்டைத்தான் பூசுறான்
Duty முடிஞ்சாக்க ரேபிடோ ஓட்டுறான்
Naughty மொழியில போனுல கத்துறான்.....
எப்பத்தான் திருந்துவானோ?!!...
பேச்சுலர்னா ஐயாம் வெரி சாரிப்பா
வேறவீடப் பாருப்பா
நாங்கரொம்ப பாவம்பா (2)
இப்படிச் சொன்னாக்க
எங்கஜி போகுவோம்
வாடகை கூடத் தாறோம்
அப்பவும் யோசிச்சா
வேறென்ன செய்யனும்
அட்வான்ஸ ஏத்தித்தாறோம்
என்னன்ன வேணுமோ செய்யுறோம் சொல்லுங்க வேணான்னு சொல்லாதீங்க......
வீடுவிட்டு வீடா மாத்துறோம்- வீட்டு ஓனரத்தான் கெஞ்சிக் கேக்குறோம். (2)
பேச்சுலர்னா ஐயாம் வெரி சாரிப்பா வேறவீடப் பாருப்பா நாங்கரொம்ப பாவம்பா (2)
Shared post

காதல் வைபோகமே.....வாயா வைப் ஏத்தலாம்

 

(காதல் வைபோகமே)
ஆண்:
வாயா வைப் ஏத்தலாம்
தீயா விளையாடலாம்
பார்ட்டி டைமாச்சுப் ப்ரோ
கூடி சிரிச்சு ஆடிக் குதிச்சா
டென்ஷன் போயாச்சுப்ரோ
ஆண்-2:
வேண்டாம் விட்டிடு Bro
வீணாப் போகாத Bro
மாடர்ன் ட்ரெண்டிங் எல்லாமே
ஆசை எழுப்பி ஆள உசுப்பி
ஆப்பு வச்சிடும் Bro
ஆண்:
பூமர் காலத்து ஆளு
உனக்கு சிக்காது கேர்ளு
ஜென்சி காலத்து லவ்வு புரியாது....தள்ளு
ஆண்-2;
பிரேக்கப் இல்லாத லவ்வு
இருந்தா எங்கேன்னு சொல்லு?! ஒன்னு போனாக்க ஒன்னு
...நீபண்ணு...ஃபன்னு
ஆண்:
சாட்டிங் பேசிமுடித்து ஓகே என முடிந்தால்
ஆண்-2:
சரசரக்கு பரிசளிப்பு
அது சலிச்சாக்கப் பிரேக்கப்பு.
ஆண்:
வாயா வைப் ஏத்தலாம்
தீயா ஸ்டெப் போடலாம்
மாடர்ன் ட்ரெண்டிங் எல்லாமே ஆசை எழுப்பி ஆள உசுப்பி ஆப்பு வச்சிடும் Bro
ஆண்-2: இன்னும் என்னென்ன வாகும் இதுலாம் எங்கெங்கே போகும் பாரும் ஆன்லைன் மோகம் அதன் வேகம் மோசம்!
ஆண்;
ஏன்Bro இத்தனை கோபம்?
ஏ அய் தலைமுறை காலம்
இன்னும் பலபடி போகும்
படுவேகம் தூரம்!
ஆண்-2;
வென்றால் நெஞ்சம் குளிரும் வீழ்ந்தால் எண்ணம் பதறும்
ஆண்: புரிஞ்சுக்கப்ரோ தெரிஞ்சுக்கப்பரோ லைஃப்புனா ஜாலிதானே ப்ரோ..
ஆண்:
பார்த்தாப் பத்திக்குமே
ஃபாஸ்டா கிக்கேத்துமே
போடும் ரீல்ஸெல்லாமே
பாவி மனதில் ஃபாரின் சரக்காய்
நெஞ்சில் சூடேத்துமே
ஆண்-2:
வேண்டாம் விட்டிடு Bro
வீணாப் போகாத Bro
இன்ஸ்டா ரீல்ஸெல்லாமே
ஆசை எழுப்பி ஆள உசுப்பி
ஆப்பு வச்சிடும் Bro
ஆண்: பார்த்தாப் பத்திக்குமே ஃபாஸ்டா கிக்கேத்துமோ
போடும் ரீல்ஸெல்லாமே
பாவி மனதில் ஃபாரின் சரக்காய் நெஞ்சில் சூடேத்துமே
ஆண்:
பூமர் காலத்து ஆளு
உனக்கு சிக்காது கேர்ளு
ஜென்சி காலத்து லவ்வு
புரியாது....தள்ளு
ஆண்-2;
பிரேக்கப் இல்லாத லவ்வு
இருந்தா எங்கேன்னு சொல்லு?!
ஒன்னு போனாக்க ஒன்னு
...நீபண்ணு...ஃபன்னு
ஆண்:
சாட்டிங் பேசிமுடித்து ஓகே என முடிந்தால்
ஆண்-2:
சரசரக்கு பரிசளிப்பு அது சலிச்சாக்கப் பிரேக்கப்பு.
ஆண்: பார்த்தாப் பத்திக்குதே ஃபாஸ்டா கிக்கேத்துதே
ஆண்-2: இன்ஸ்டா ரீல்ஸெல்லாமே ஆசை எழுப்பி ஆள உசுப்பி ஆப்பு வச்சிரும் Bro
ஆண்-2:
இன்னும் என்னென்ன வாகும்
இதுலாம் எங்கெங்கே போகும்
பாரும் ஆன்லைன் மோகம்
அதன் வேகம் மோசம்!
ஆண்;
ஏன்Bro இத்தனை கோபம்?
ஏ அய் தலைமுறை காலம்
இன்னும் பலபடி போகும்
படுவேகம் தூரம்!
ஆண்-2;
வென்றால் நெஞ்சம் குளிரும்
வீழ்ந்தால் எண்ணம் பதறும்
ஆண்:
புரிஞ்சுக்கப்ரோ
தெரிஞ்சுக்கப்பரோ
லைஃப்புனா ஜாலிதானே ப்ரோ..

24/03/2026

மையமோ ஓரமோ

 


மையமோ ஓரமோ
......மன்றத்தில் நாங்களில்லை
பைய வருவோம்
.....பதுங்கிப்பின்- ஐயமென்ன?
தீயசக்தி வென்றிடுமோ
.....தேர்தலிலே என்றெண்ணி
ஓயமனம் கொண்டேன்
....உவந்து!

✍️செ. இராசா

அதைஇதை எழுதாமல்

 

அதைஇதை எழுதாமல்
எதைஎதை எழுதனுமோ
அதைஅதைத்தான் எழுதனும்னு
எதையுமே எழுதாம இருப்பதற்கு
எதையாவது எழுதுவுமேன்னு
இதையிப்ப எழுதுறேன்...
எதை எழுதினாலும்
அதைக் கண்டுக்காதவுங்க
இதைப்பத்தி ஏதாவது சொன்னா
அதையும் பெரிசுபடுத்தாம
இதையாவது பார்த்தாங்களேன்னு
அதையும் கடந்து போவேன்...
இதைச் சொல்லனும்னு நினைச்சேன்
அதை அப்படியே சொல்லிட்டேன்
இதை ஏத்துக்கிட்டா நன்றி..
இதை ஏத்துகாட்டியும் நன்றி..
✍️செ. இராசா

19/03/2026

நீயே எனக்குத் துணையாவாய்

 

நீயே எனக்குத் துணையாவாய்
தீயே எனக்குள் ஒளியானாய்
நீரே எனக்குள் சுவையானாய்
வெளி வளி நிலமதில் கருவானாய்
ஒலி மணம் உணர்வென உருவானாய்
ஆ‌‌....ஆ.....ஆ‌‌ ..
நீயே எனக்குத் துணையாவாய்
ஞானமும் நீயே ஞாலமும் நீயே
வானமும் நீயே வண்ணமும் நீயே
தேகமும் நீயே தேவையும் நீயே
ராகமும் நீயே தாளமும் நீயே
பாடலும் தேடலும்
பைந்தமிழ் பாக்களும்
தோற்றமும் மாற்றமும்
தோன்றிடும் யாவிலும்
நீயே நீயே...நீயே நீயே
நீயே எனக்குத் துணையாவாய்
✍️செ. இராசா

18/03/2026

அற்புத உணவுதான் இந்த ஹலீம்

 


ஒவ்வொரு உணவுக்கும்
ஒவ்வொரு சுவையுண்டு
ஒவ்வொரு சுவைக்குமே
உண்மையில் உணர்வுண்டு

உணர்வின் நினைவலை
மனதினில் எழுகையில்
துளிர்விடும் பதிவுகள்
கிளர்ச்சியைத் தூண்டுமே...

அப்படி ஒரு அற்புத உணவுதான் இந்த #ஹலீம். நம்மில் பலர் இந்த உணவைப் ருசிக்காமலேயே ஒதுக்கி விடும் மனப்பான்மை கொண்டவர்கள். எங்கள் வீட்டில் கூட நானும் என் மகனையும்தவிர யாரும் சாப்பிடுவதில்லை. இந்த உணவை ருசிக்கும் முன் இதை எப்படித் தயார் செய்கிறார்கள் என்று ஒருமுறைப் பாருங்கள். அந்தத் தயாரிப்பு முறையே இந்த உணவை ஒருமுறையேனும் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டும்.

இந்த உணவு தினமும் ஹைதராபாத்தில் இருந்து கத்தாரில் உள்ள டெக்கான் திவான் உணவகத்திற்கு விமானத்தில் வருவதாக 2013ல் கேள்விப்பட்டு வாங்கிச் சாப்பிட்டேன். அன்றுமுதல் அவ்வப்போது வாங்குவேன். அதே உணவை இன்று சென்னையில் இணைய வழியாக வாங்கிச் சாப்பிட்டேன். அட அடா அடா.... அற்புதமான சுவைங்க... அப்படியே நாக்கில் நிற்கிறது.

மட்டன், கோதுமை, பல்வேறு பருப்புகள், கொஞ்சம் அரிசு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, நெய்..... இப்படி என்னனென்னமோ போட்டு பிரத்தியேகமாக அடுப்பைத் தயார் செய்து பலமணிநேரம் கிண்டு கிண்டுவென கிண்டி.....அதை அப்படியே தம்போட்டு எடுத்து....ப்பா அத்தனை மெனக்கெடலுக்குப் பின் ஹல்வா பதத்தில் வரும் பாருங்க.....
அட போங்க ஜி....போய் ஒருமுறையேனும் சாப்பிடுங்க... அப்புறம் சொல்வீங்க.

✍️செ. இராசா

 தவளைகள்

தன் வாயால் கெடு(க்)கின்றன.

16/03/2026

நன்றி இறைவா

 

நட்பென்று வந்தாய்!
.....நகைந்தாட வைத்தாய்!
.....மனமார்ந்த நன்றி இறைவா!
கிட்டாத தெல்லாம்
.....கிடைத்தறிய வைத்தாய்!
.....சிரம்தாழ்ந்த நன்றி இறைவா!
எட்டாத இன்பம்
....எமையுணர வைத்தாய்!
.....இனிதான நன்றி இறைவா!
சட்டென்றே ஓர்நாள்
.....சகமுணர வைப்பாய்!
.....அதற்கின்றே நன்றி இறைவா!

✍️செ. இராசா

நுங்கும் பதநீரும்

 


நுங்கும் பதநீரும் நோயில்லா வாழ்வுதரும்
தங்கு தடையின்றித் தள்ளு!

✍️😊இராசா

15/03/2026

எத்தனையோ முறை கத்தாரில்.....




எத்தனையோ முறை கத்தாரில் இருந்து இந்தியா வந்திருந்தாலும் இம்முறை வந்தது உண்மையில் மறக்கமுடியாத அனுபவமாகவே இருந்தது. பொதுவாக ஊருக்கு போய்வரும் பதிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றே நினைத்தாலும் இந்தப் பதிவின் அவசியம் கருதியே பதிவிடுகின்றேன்.

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்"
என்கிற குறளுக்கு முற்றிலும் மெய்யாகத் திகழும் கத்தார் நாட்டிற்கும் மன்னருக்கும் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் கத்தார் அரசு செய்யும் சேவையையும் அவர்கள் எங்களுக்கு அளித்த பாதுகாப்பையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
ஆம்...
மக்களை எப்படி எப்படி வழி நடத்த வேண்டும், வணிக வளாகங்களை எப்படி இந்தச் சூழலில் கண்காணிக்க வேண்டுமென ஆரம்பித்து மீண்டும் இயல்புநிலை திரும்ப அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் சிறப்பாகவே செய்கின்றார்கள்.
நான் மார்ச் 9ல் ஊருக்குப் போவதற்காக ஓமன் ஏர்லைன்ஸில் பயணச்சீட்டு வைத்திருந்தேன். போர்ச்சூழலால் ரத்து ஆனாலும் விலை ஏதும் மாறாமல் மாற்று ஏற்பாடாக கத்தார் ஏர்வேஸில் இருந்து ஓமன்வரை கூட்டிவந்து பின்னர் அங்கிருந்து ஓமன் ஏர்வேஸில் சென்னை வந்தடைய வழிவகை செய்ததெல்லாம் ஆச்சரியமாக உள்ளது. (அவர்கள் நினைத்திருந்தால் பணத்தை திருப்பி செலுத்தி இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது). பாதுகாப்பு கருதி பல விடயங்களை இங்கே கூற முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓமனில் 19 மணி நேர இடைவெளிக்குப்பின் இன்றுதான் வந்தடைந்தேன் என்றாலும் இது முற்றிலும் புதிய அனுபவமே. காரணம் கிளம்பும்போதே டம் டம்மென்று சப்தம். பயமாகவே இருந்தது. சாமியைக் கும்பிட்டுக் கொண்டேன். கடைசி நிமிடம் வரை பயணம் இருக்குமோ இருக்காதோ என்கிற சந்தேகமும் இருந்தது. ஆகவேதான் யாரிடமும் இம்முறைத் தெரியப்படுத்தவில்லை. ஆக.... யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாமாக.
அப்புறம் என்னாச்சு?!!
அப்புறம் என்ன?.......இறைவனின் அருளாலும் கத்தார் அரசின் அற்புதமான முயற்சியாலும் அடியேன் வீடுவந்து சேர்ந்தமைக்கு எம் இனிய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
வாழ்க வளமுடன்!

08/03/2026

குண்டுமழை பொழிகிறது

 குண்டுமழை பொழிகிறது

ஒவ்வொரு குண்டுக்கும் சைரன் ஒலிக்கிறது....
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
டும்டும் ஓசைகள் கேட்டிடுமே...
ஆ....ஆ....ஆ...
ஏவும் குண்டு மோதும் போது‌.‌...
ஆ ஆ...
ஏவும் குண்டு மோதும் போது‌.‌..
வீழும் வந்து டெப்ரிஸ் அங்கு..
எங்கெங்கும் குண்டை வீசி பார்ரா என்றார்..
டிக்கெட்டை கேன்சல் செய்து கிடடா என்றார்..
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி அறையினிலே..‌‌
கழியுது இரவுகள்...
பொழியுது குண்டுகள்...
ஆ‌..ஆ‌....
பகலிலும் இரவிலும் தொடர்கிறதே....
குண்டுமழை பொழிகிறது

07/03/2026

சுக்ரன் ஹபீபி.

 



அடியேன் கத்தார் வந்த புதிதில் மிகவும் ஆச்சரியமாக பார்த்த விடயங்களில் ஒன்று, இந்த இரமலான் நோன்பு. என்னைப் பொறுத்தவரையிலும் வளைகுடா நாடுகளில் மட்டுமே அதன் தாத்பரியத்தை முழுமையாக உணர முடியும் என்று நினைக்கிறேன். காரணம், இங்கே உள்ள அரசாங்கமும் அதன் விதிமுறைகளுமே.
அதாவது, நோன்பு நோற்கும் நேரம் முழுவதும் சாப்பாட்டுக் கடைகள் ஏதும் இயங்காது. (இப்போது சில கடைகளில் பார்சல் தருகிறார்கள். முன்பெல்லாம் இல்லை). பொதுவாக 6 மணி நேரங்கள் மட்டுமே வேலை நேரம். (சில நிறுவனங்கள் மட்டும் பாகுபாடு பார்க்கின்றன. சட்டப்படி அது தவறு)
வெளியே பார்க்கும்படி அமர்ந்து சாப்பிட்டால் அபராதம் உண்டு.
இப்படி நிறையவே அரசும் விதிமுறைகள் வைத்திருப்பதால் இந்த ஒரு மாதம் முழுவதுமே மற்றவர்களும் ஒரு மாற்று அனுபவத்தைப் பெற முடியும்.
என்னைப் பொறுத்தவரையிலும் பள்ளிக் காலத்தில் இருந்தே ஆன்மீக ஆராய்ச்சியில் இருப்பவன் என்பதாலும் இறைவன் அல்லது இறைநிலை என்பது ஒன்றே என்பதை உணர்ந்ததாலும் அனைத்து மதங்களையும் நன்றாகவே புரிந்து கொண்டவன் என்று சொல்ல முடியும். அதனால்தான் என்னால் எந்தவித குழப்பமும் இன்றி கிருத்தவ ஆலயங்களுக்கும் இஸ்லாமிய மசூதிகளுக்கும் ஆரம்ப காலங்களில் செல்ல முடிந்தது.
பொதுவாக ஆரம்ப காலத்தில் இந்த இஃப்தார் விருந்துகளுக்கு நிறையவே சென்றுள்ளேன். மேலும் இஸ்லாமியப் பண்டிகை காலங்களில் சாப்பாடு வீடுதேடி வரும். இப்போதெல்லாம் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை.☺️(இந்தக் கட்டுரைக்குப்பின் வரலாம்....😃😃😃) அப்படி யோசித்துக் கொண்டே மாலை வேளையில் கடை வரைக்கும் போய்வரலாம் என்று கிளம்பினேன். அப்போது ஒரு கத்தாரி கார் மிக அருகே வந்தது. சரி ஏதோ கேட்கப்போகிறார் என்றே நினைத்தேன்... "சலா மலேகும்" என்றார் "அலைக்கும் சலாம்" என்றேன். "கைஃபாலக்" என்று நலம் விசாரித்தார். "ஜென் கொய்ஸ்" என்றும் நலமே என்றேன். உடனே உள்ளே இருந்து இஃப்தார் உணவுப் பொட்டலத்தை மனம் மகிழ கொடையளித்தார். மனமார ஏற்றுக் கொண்டு "சுக்ரன்" என்று நன்றியைத் தெரிவித்தேன். அப்போதே மனம் முழுவதும் நிறைந்தது. வீடு வந்தவுடன் வயிறும் நிறைந்தது.

வாழ்க வளமுடன்!

04/03/2026

படபடப்பாய் உள்ளதெனில்

 

படபடப்பாய் உள்ளதெனில்
......பைய நிமிர்ந்து
கடவுளை உள்நோக்கிக்
......காண்பீர்!- திடமடைவீர்!
நோக்கமுடன் நன்றாக
.......மூச்சுப் பயிற்சிசெய்து
தீர்க்கமுடன் செய்வீரே
......தேர்வு!

03/03/2026

வெறுப்பு

 




பற்றிய ஒன்றைப்
பறித்துப் பாருங்கள்...
பச்சக் குழந்தைகூட அலறும்..
ஆனால்..
வெறுப்பை உமிழாது!

அதுவே
ஒருவர் பற்றிய விடயத்தைப்
ஒருவரிடம் பேசுங்கள்
வெறுப்பு வாந்திகள்
வேகமாய் விழும்...

விருப்பின் முரணாய்
வெறுப்பே வீற்றிருந்தாலும்
வெறுப்பையே விரும்பும்
அருவருப்பான உலகமிது....

யோசித்துப் பாருங்கள்?!

பற்றற்றான் பற்றையே
பற்றச்சொன்னார் வள்ளுவர்
........பற்றினோமா?!
பற்றற்றானை விட்டுவிட்டு
பற்றினோம் மதத்தை; விளைவு
பற்றி எரிகிறதுபார்; ஆம்
பற்றி எரிகிறது பார்!

முதலில் ஒருவர் வருவார்!
பின்னர் இன்னொருவர் வருவார்!
இப்போது முன்னவர்பின் நிற்போர்; பழமைவாதி!
பின்னர்வர்பின் நிற்போர்; புதுமைவாதி!

அதற்குப்பின் ஒருவர் வந்தால்
முந்தைய பின்னவர் பழமைவாதி!
இன்றைய பின்னவர் புதுமைவாதி!
இதில் யார் சரி?
இல்லை யாருடையது சரி?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

உயிர்நீங்கும் போதும்
பாவிகளை மன்னியுங்கள் என்றார்
இயேசுநாதர்!

யார் பிறரை மன்னிக்கிறாரோ
அவரின் கண்ணியத்தை அதிகப்படுத்துகிறான் என்றார்
நபிகள் நாயகம்!

தத்வமஸி எனும் தத்துவம்கூறி
எதிரியை நேசிக்கச் சொல்கின்றன
உபநிடதங்கள்!

பகைவனுக்கு அருள்வாய்
என்றார் பாரதியார்!
வெறுப்பை அன்பே வெல்லும் என்றார் மகாத்மா!

இப்படி எத்தனையோ போதனைகள்
இருந்தும் என்செய்ய?

வெறுப்புப் பிரசாரம்
வெறுப்புப் பின்னூட்டமென
எதிர்மறைக் கருத்துக்களை
எப்போதும் நிறைத்தால்
எதிர்காலத் தலைமுறை
என்னவாகும்?!
அட
இப்போதே இடிஇடிக்கிறதே.‌‌

போதும்!
வெறுப்பை விருப்பால் வெல்வோம்!
விருப்பை விரிவாய்க் கொள்வோம்!