10/11/2022
முறுக்கு மீசைக் காரா
ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல்
08/11/2022
பல்
பல்வகைத் தகவல்களை
பலவாறு பேசம்முன்
பல்-வகைத் தகவல்களை
பல் நோக்கில் பார்ப்போமா...?!!
வெட்டுப் பல் வெட்டுமாம்..
வேட்டைப்பல் கிழிக்குமாம்..
முன்கடவாய் நொறுக்குமாம்..
பின்கடவாய் அரைக்குமாம்..
ஆமாம்...என்ன இதெல்லாம்?
பல்லைப் பற்றிய
பல்-வகைத் தகவல்கள்தானே?
பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பேன்
பல்லைப் புடுங்கிடுவேன் என்றால் பதறாதீர்
பல்லைச் சொத்தாய்ப் பாராமல்
பல்லைச் சொத்தை ஆக்கினால்
இப்படித்தான்
பல் மருத்துவர்
பல்லைத் தட்டவா எனப்
பரிந்துரை செய்வார்...
சரி...சரி...
பல்லை நறநறவென்று கடிக்காதீர்.
பல் போனால் சொல் போச்சாம்; இது
பல்லைப் பற்றிய பழமொழி
சொல் போனால் எல்லாம் போச்சாம்; இது
சொல்லாமல் விட்டப் புதுமொழி
இங்கே....
கால்மேல் கால்போட்டு பேசினால்
தப்பில்லை! ஆனால்
நாக்குமேல் பல்போட்டு பேசினால்
தப்புதான்!
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்?
நாளெல்லாம் பல் முளைக்க
நாமொன்றும் சுறாமீன் இல்லை...
ஆறுமுறையேனும் பல் முளைக்க
நாமொன்றும் யானையும் இல்லை...
பால்பல் விழுந்துவிட்டால்
புதிய பல் முளைக்கும்
இந்த வாய்ப்பும் ஒரு முறைதான்
மறவாதீர்
அது வெறும் வாய்ப்பு அல்ல
அதுவே நம் வாய்ப்பூ....!!!
அங்கே புன்னகை மட்டும் பூக்கட்டும்
அமிலங்கள் வேண்டாமே....!!!
செ. இராசா
(நான்காம் வருடம் படிக்கும் பல் மருத்துவ மாணவி மேடையில் பேசுவதற்காக எழுதிய கவிதை)
07/11/2022
ஔவைத் திங்கள் 15 --- தலைப்பு: அப்பா (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை)
அப்பாவின் பின்சென்றால் அப்பாவின் அப்பாவாய்
அப்பப்பா எத்தனைபேர் ஆய்?
(1)
ஆதியப்பா யாரப்பா? ஆராய்ந்து காணப்பா..
போதியப்பா... பின்னே புகழ்ந்து!
(2)
தந்தையின் தந்தையார் தந்தநல் விந்தைத்தான்
வந்தபின் தூவுகிறோம் வாழ்ந்து!
(3)
தொடரோட்டம் போலே தொடர்கின்ற பந்தம்
கடந்துவந்தத் தூரத்தைக் காண்!
(4)
உயிரணுவின் உள்ளே உறைந்திருக்கும் ஜீனால்
உயிர்ப்பிக்கும் ஆதி உரு!
(5)
தாயுறவு சத்தியம்! தந்தையுறவு நம்பிக்கை!
ஆயுளை நீட்டிக்கும் அன்பு!
(6)
அப்பாசொல் மந்திரமா? ஆராய வேண்டாமா?!
தப்பென்றால் மட்டும் தவிர்!
(7)
தப்பாகத் தோன்றுவது தப்பில்லை என்றானால்
அப்பாசொல் குத்தும் அறி!
(8.)
அப்பாவாய் அம்மாவாய் ஆனால்தான் நன்கறிவார்
அப்பா-யார்? அம்மா-யார்? என்று!
(9)
அப்பா குரலொன்றே ஆத்மபலம் என்றறிந்தோர்
அப்பாவைப் போற்றுகின்றார் ஆழ்ந்து!
(10)
06/11/2022
கஷ்டப் பட்டுக் கவலைப் பட்டு
05/11/2022
இல்லாள்
03/11/2022
காசுகாசு காசு;என்று
02/11/2022
அம்பை பெயர்கொண்ட அம்மணியே.
சால்வனைக் காதலித்து
சாமர்த்தியமாய் மறைத்துவிட்டு
சுயம்வர மண்டபத்தில்
சூடிடு மாலையென்று
சுயநல யோசனை தந்த
சுந்தரியைக் கேட்கின்றேன்...
அம்பிகா அம்பாலிகாவின் அக்கையே..
#அம்பை பெயர்கொண்ட அம்மணியே..
கங்கை மைந்தன் வந்து
தம்-கையை வைத்தபோது
தங்கைகள் பேசவில்லை சரி...
உம்-கை உதறலையே ஏன்?!
வந்த இடம் வந்து
வம்பிழுத்து வாங்கியன்று
நொந்த காதலனும்; நீ
சொந்தமெனச் சொல்லலையே ஏன்?!
சேதி தெரிந்ததுமே
சென்றுவர அனுமதித்தும்
சேர்க்க மறுத்துவிட்டக்
காதலனைக் கேட்கலையே ஏன்?
உன்னவன் உதறிவிட்டால்
உன்னவனைக் கேட்காமல்
தன்னவனாய் மாறென்று
தூக்கியவனைக் கேட்டாயே ஏன்?
கைவிட்ட காதலனை
கை எடுக்க எண்ணாமல்
போமா எனச் சொன்னவனை
போட்டுத்தள்ள நினைத்தாயே ஏன்?
சரசம் செய்த சண்டாளனின்
சிரசினைக் கொய்யாமல்
பரசுராமைக் கூட்டிவந்து
பீஷ்மரோடு மோதினாயே ஏன்?
அம்பையாய்த் தோற்றபோதும்
அப்படியே போகாமல்
சிகண்டிகையாய்ப் பிறந்துவந்து
சீறி நின்றாயே ஏன்?
தவறிலும் தவறிழைத்த
தறுதலையை விட்டுவிட்டு
பிறவி விட்டு பிறவி வந்து
பெரும்பிழையைச் செய்தவளே...
கர்மவினை காரணமே
காரியமாய் ஆவதினால்
தர்மப்போர் காரணியாய்
காரிகை நீ வந்தனையோ?!!
செ. இராசா
01/11/2022
ஈபில் டவரெல்லாம்









