28/01/2017

ராஜா கவி ராஜா


தா கவி என்று என்னிடம் நீ
புது கவி ஒன்று கேட்டாயே
பல கவி பாடியவர் உலகினிலே
என் கவி பொடியென நானறிவேன்
ராஜ கவி யாய் வாழ்ந்து வந்த
மகா கவி பாரதி இன்றிருந்தால்
என் கவி(தா)த் திறமை வளர்த்திடவே
தனி கவி ஒன்றை கேட்டிடுவேன்
பொதுக் கவி இயற்றிய வேந்தனிடம்
சுயக் கவி நானும் கேட்டதற்கு
தமிழ் கவி உலகின் கால்களிலே
ராஜா கவி(தாவாய்) நான் வீழ்ந்திடுவேன்

✍️ செ. இராசமாணிக்கம் கவிதா

24/01/2017

அரசியல் வாதிகளே


அரசியல் வாதிகளே
அரசியல் வாதிகளே
அரசின் இயல்பறியா
அரசியல் வி'யாதிகளே!

அறவழிப் போராட்டத்தின்
அதிர்வலை அகலம் கண்டு
உணர்வலைகள் நின்றுபோக
உறைஞ்சுதான் போனீங்க!

மக்களின் மறதிநோயும்
சாதீய தீச்செடியும்
மறைந்திடப் பார்த்ததுமே
மகிழ்ந்திடவும் மறந்தீங்க!

போராட்டம் செய்தவன
பாராட்டிப் பேசியே
சதுரங்க வேட்டையைத்தான்
சரியாத்தான் செஞ்சீங்க!

அதிகார அடக்குமுறையை
கட்டவிழ்த்து விட்டுப்புட்டு
கட்டுக்கட்டா பலபொய்களை
கதைச்சுட்டே இருக்கீங்க!

பல்லாக்கு தூக்கியே
பழகிப்போனஅடிமைகளே
பகுத்தறிவு என்னவென்று
படிக்காத பதருகளே!

அரசியல் வாதிகளே
அரசியல் வாதிகளே
அரசின் இயல்பறியா
அரசியல் வி'யாதிகளே!

19/01/2017

அறவழியில போராடி



அறவழியில போராடி
அகிலத்தையே அதிரவைச்ச
அண்டத்தையே மிரளவைச்ச
அனைவருக்கும் புரியவைச்ச
அடுக்கடுக்காக அளந்துவிட்ட
அரசியல் அடிமைகள
அடிக்காம அடிச்சுப்புட்ட
அடிவயிர கலங்கவச்ச

ஊரெல்லாம் ஒன்னுகூடி பெருந்
தேரெல்லாம் இலுத்தவன
பாரல்லாம் கேக்க வைச்ச
யாருடா இவங்கன்னு

தமிழனோட அடையாளம்
தலைவணங்காத் தன்மானம்
தனியாத்தான் தெரியுதிங்கே
தரணியல்லாம் அதிருதிங்கே

முறிக்கிவிட்ட மீசையோட
முரட்டுக்காளை வேகத்தோட
மிரட்டும் அனல் பார்வையோட
மளமளவெனக் கூட்டத்தோட
தகதகவெனக் கோபத்தோட
அலைகடலென வந்துநீயும்
அடிமனச குளிரவைச்ச
அறவழியில போராடி




மறத்தமிழன் மாண்பறியார்
மடத்தனமாய் பேசுகின்றார்

மாட்டிற்கு வதை ஏன் என்றே
மதிகெட்டே வினவுகிறார்

எம் குழந்தை போலதனை
எம் நெஞ்சில் வைத்ததனை

கொஞ்சி கொஞ்சி பாத்துக்கிட்ட
கொழு கொழுவென வளர்த்துவிட்ட

எங்களோட பிள்ளைகள
ஏறுதழுவி விளையாட

எவங்கிட்ட கேக்கனம்னு
ஏதிலார் நினைக்கின்றார்

தமிழனென்ற ஒரு சொல்லைத்
தரணியிலே போற்றிடவே

முடியாதென நீ மறுத்தாய் இனி
முழுநேரம் நீ தவிப்பாய்

18/01/2017

குடங்குடமா குடிச்சபின்னே

குடங்குடமா குடிச்சபின்னே
குடிமறக்க மாலைபோட்டு
குடிக்காமத்தான் இருந்தீக

மலையிரங்கி வந்ததுமே உங்க
மதிகோணல் ஆயிடுச்சு எங்க
மனசு உடைஞ்சி போயிடுச்சி


குலத்தொழிலை தொலைச்சீக
குடும்பத்தையும் மறந்தீக
குணங்கெட்டு திரிஞ்சீக

குலங்கெட்டு போனபின்னும்
குடிக்கிறது குத்தமான்னு
கூசாமக் கேப்பீக

யாருபோட்ட சாபமோன்னு
ஊருக்குள்ள ஒரேப்பேச்சு
உமக்கேனோ தெரியாமப் போச்சு

கருவுல வந்த மகன்
தெருவில கெடக்கிறான்னு
ஊரில சொல்லும்போது

உருக்குலஞ்சு போயிட்டாக
உயிரப் பாதி விட்டுட்டாக
உன்னைப் பெத்துப் போட்டவுக

பில்லி சூனியம் இருக்குமோன்னு
பூசாரி வாக்கு கேக்க
போயிக்கிட்டே இருக்குறாக

காட்சியேதும் மாறவில்லை
காலமின்னும் கூடவில்லை
காத்துமட்டும் கிடக்கிறாக

மீண்டும் மீண்டு வருவீகன்னு

16/01/2017

தவறான புரிதல்


நான் யாரென நானே அறியலையே
நான் யாரென நீயுரைத்தாய் அதுசரியோ?

நின்கூற்றே மெய்யேயென
நீ கதைப்பாய் அதுசரியோ?

உண்மையதை உணர்ந்தாலே
உதிர்ப்பாயோ அனல் வார்த்தை?

நீர் செல்லும் இடமெல்லாம்
நிறம் மாறும் தன்மையென
நீ யெனை நினைத்தாயோ?!
நீரின் குணம் என்னவென்று
நீதானதை யறியலையோ?!

உச்சியிலே உதயமாகி
ஒருவழியாய் ஓடிபின்னே
பலவழியாய் பாதைமாறி
பள்ளதிலே தடுமாறி
படுகுழுயில் வீழ்ந்தாலும்
பக்குவமாயதைத் தாண்டி அப்
பரந்தாமன் கருணை ஆழிப்
பாதம் தொடும் நாழி தனை
பலநாளாய் எண்ணி எண்ணி
பக்தியோடு வேண்டுகின்றேன்
நான் அறிவேன் யாமவன்
நாய் அடியேன் என

எமையறியும் எண்ணம் விட்டு
உமையறியும் உள்ளம் கொண்டால்
உண்மைதனை உணர்ந்திடுவாய்
உயர்வழியில் சென்றிடுவாய்

07/01/2017

மதுவென்ற அரக்கன்

மதுவென்ற அரக்கன்தனை
மகிழ்வுடனே நட்பு கொண்டு
மதிகெட்டுத் திரியும் மானுடா...

வந்த பாதைதனை மறந்து
வகுத்த பாதையதை மறந்து
வாக்குகள் தடம் மாறி
வந்தவர்கள் வெறுத்தோடி
வசதிகள் கரைந்தோடி பல
வருடங்கள் உருண்டோடி


எதற்கடா இவ்வாழ்க்கையென
பதமாய் பலர்கேட்டும் உன்னுள்
ஏனடா தோன்றவில்லை அது
ஏளன வார்த்தையென?

என்றும் கெடா வாழ்க்கைதனை
என்றுமே நீ வாழ்ந்ததில்லை
வாழும் வழி அதுவேயென
வார்த்தைகள் பல நீ உரைத்தாய்

கரம் பிடித்தவளுனைச் சீயென
காரி யுமிழ்ந்தாலும் அதன்
காரணமிதுவெனத் தெரிந்தாலும்
காலனின் வருகைக்கு
காத்திடுமுதிர் கிழவனெனக்
காலத்தை கழிக்கிறாய்
அய்யகோ!!!

ஒருவனுக்கு உணவு இல்லையேல்
அகிலத்தை அழித்திட ஆணையிட்ட
அந்த ஆண்மகன்இன்றிருந்தால்
பாடிடுவான் பலகவிகள்
பலித்திடுவான் இத்தேசம்தனை

அரக்கர்தம் கூட்டத்தைக்
கழுவேற்றிக் கொல்லாத
கடமை மறந்த
அரசன்தனை அழித்திடுவான்
 உனைக்கொல்லும் ஒருநிமிடமுன்னே.....


---செ. இராசமாணிக்கம்

09/06/2012

கனவில் காண்பதல்ல நட்பு

நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு !.

மனதில் புதைத்து மரணம்
வரை தொடர்வதுதான்
உண்மையான நட்பு !!

09/10/2010

அழகு! அழகு !


அழகு! அழகு !
எதுதான் அழகு ?
என் அன்பு மகனின் 
கொஞ்சல் பேச்சழகு!
அன்ன நடையழகு!
பால் பற்களின்  புன்னகை அழகு!
சொக்கிய விழிகளின்  பார்வையழகு!  
உண்ட பின் செருமல் அழகோ அழகு ! 
அழகு! அழகு ! 
எதுதான் அழகு ?




20/09/2010

வாஸ்து என் பார்வையில்

வாஸ்து என் பார்வையில்

வாஸ்து என்றால் என்ன ?
         வாஸ்து,வாஸ்து  என்று நாம் எங்கு திரும்பினாலும் கேட்கின்ற ஒரு சொல்லாக இது உள்ளது.அப்படி என்ன தான் சொல்கின்றது இந்த வாஸ்து?
        மனிதனின் அத்தியாய தேவைகளின் ஒன்றாக  இருக்கும் இருப்பிடத்தை, ஒரு இயற்க்கை விதியோடு வடிவமைப்பதே  வாஸ்து ( வாஸ்து சாஸ்திரம் என்பர் சிலர் ) என்கிறோம் .

பொறியாளருக்கு வாஸ்து தெரிய வேண்டுமா ?
        ஊரோடு ஒத்து போகிறவர்கள் தானே சாதிக்க முடியும்.  வாஸ்து பழமையான விதியாக இருப்பினும் ,பெரும்பாலனோர் வாஸ்து விதி கட்டிடத்தை தான் விரும்புகின்றனர் .எனவே அதை பற்றிய அடிப்படை அறிவு  இந்தியப் பொறியாளருக்கு  கண்டிப்பாக அவசியம்.

வாஸ்து அறிவியல் பூர்வமானதா?
           பழமை அனைத்தையும்  புதிய அறிவியலால் விளக்க முடிந்தால் தான் நம் அறிவு அதை ஏற்கும்.இல்லையேல் அது எப்பேர்பட்ட தாயினும் பகுத்தறிவு யோசிக்க வைக்கும்.
           ஆம் பஞ்ச பூதங்களையும்(நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம்) நமக்கு பயன்படும் வகையில் நம் வீட்டை வடிவமைப்பதே இந்த வாஸ்து விதி.
            நம் பூமி 23 1/2 பாகை சாய்வாக சுற்றுகிரதல்லவா? புவி ஈர்ப்பு விசை  நம்மை என்றும் பாதிக்கும் காரணி,சரி தானே ?  இதை சரி சைய்ய வேண்டி உள்ளது ,ஆகவே தான் ஒரு பக்கம் நாம் (தென் மேற்கு ) உயர்த்தியும் ,மறுபக்கம் (வட கிழக்கு ) தாழ்த்தியும் அமைக்கிறோம்.
              நமக்கு வட கிழக்கு  பருவ காற்று அதிகம் வீசுவதால், ஹால் மற்றும் போர்டிகோ வடகிழக்கில் வருவதாக அமைக்கிறோம் .
              மலைச்சாரல் உள்ளே வரக்கூடாது என்பதற்க்காக  வடக்கு மற்றும் கிழக்கு பகுதி கூரை தாழ்வாக இருக்க வேண்டும்.சனி மூலையில் போர் போடுவது என்பது ஒரு பொதுவான விதியே.(அனைவரும் ஒரே விதியில் சென்றால் ஊற்று பரப்பு பிரச்னை வராதல்லவா? )
            காலைக் கதிரவன் கதிர்கள் சமையலறை சன்னலில் படும் பொழுது அதில் படிந்துள்ள பூஞ்சைகள் அழிகின்றன,எனவே தான் நாம் சமையலறையை  தென் கிழக்கில் அமைக்கின்றோம் . மாலைக் கதிரவனில்  விட்டமின் D உள்ளது,அதன் கதிர் விழ படுக்கை அரையை  தென் மேற்கில் அமைக்கிறோம்.
              இப்பொழுது நாம் கூறலாமல்லவா, வாஸ்து நவீன அறிவியலோடு ஒத்துள்ளது என்று. இயற்க்கையை சரியான விகிதா சாரத்தில் பயன்படுத்தும் அறிவியல் கலை-வாஸ்து .

வாஸ்துவால் என்ன நன்மை?
           இயற்கையோடு  பொருந்தி வீடை வடிவமைப்பதால் நம் வீடு ஒரு உயிர் ஓட்டமுள்ள இல்லமாக நம்மை சந்தோசப்படுத்துகிறது.ஆரோக்கியம் மற்றும் உற்சாகம் கிடைக்க வழி வகுக்கின்றது.  நாம் கட்டிய வீட்டில், நிம்மதி கிடைக்கும் பொழுது நமக்கு மகிழ்ச்சி தானே?.

 எல்லாரும் வாஸ்து பார்த்து கட்ட முடியுமா ? 
             கண்டிப்பாக முடியாது . இட நெருக்கடியும் , பொருளாதார வசதியும் மிக முக்கிய காரணிகள்.பெரும்பாலும் தனி வீடு  அமைப்பவர்களுக்கே வாஸ்து விதி சாத்தியம். அடுக்கு மாடி வீடு மற்றும் வாடகை வீட்டில் குடி இருப்போர் இதை குழப்பி கொள்ள வேண்டாம்.

 வாஸ்து  இல்லா வீடு பாதிப்பா ?
     கண்டிப்பாக இல்லை.
 தூய்மையான ஆலயம்,அழகான அருவி ,ரம்மியமான ஏரி.....இவைகளை நாம் பார்க்காவிட்டாலும் வாழமுடியும்.அதைப் போல, இயற்க்கை விதியான வாஸ்து இல்லாத  வீட்டிலும்  வாழமுடியும்.

பரிகாரம் தேவையா ?
        தேவையே இல்லை.(இருந்தாலும் நம் மனது எதையாவது சையலேன்னா,அவ்வளவு சீக்கிரம் நிம்மதி பெறாது.எனவே சில ஐட்டங்களை கூறுகிறேன்.இது எல்லாம் சும்மா ஒரு மனோ ரீதியான விடயமே . தினமும்  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூ போடுவது.வாசலில் விளக்கு வைப்பது .பிரமிடு வைப்பது .சப்த ஓலி எழுப்பிகளை தொங்க விடுவது ........இன்னும் யோசிப்பாங்க ..?)

வாஸ்து முக்கிய விதிகள் என்ன ?

  • வடகிழக்கு (சனிமூலை) -ஹால்,போர்டிகோ ,கன்னி மூலையைவிட தாழ்வாக இருக்க வேண்டும்,பூஜை அறை . போர் போடலாம்.வெற்றிடம் விடலாம் .
  • தென்கிழக்கு (அக்னி) -சமையலறை. முடியாவிடில்  வாயு  மூலை.
  • வடமேற்கு (வாயு  மூலை)-படிப்பறை,சின்ன படுக்கை அறை
  • தென்மேற்கு (கன்னி மூலை)-பெரிய படுக்கை அறை ,கன்னி மூலை உயரமாக வேண்டும்,
  • வடக்கு - தளக்கூரை தாழ்வு,வெற்றிடம்  தென் மேற்கை விட அதிகமாக விடவும் 
  • கிழக்கு-  தளக்கூரை தாழ்வு ,வெற்றிடம் தென் மேற்கை விட அதிகமாக விடவும்
  • தெற்கு -கழிப்பறை ,படிக்கட்டு ,தளக்கூரை உயரம்
  • மேற்கு -கழிப்பறை ,படிக்கட்டு ,தளக்கூரை உயரம் 

----------------------------------முற்றும்-------------------------------------------அன்புடன்,  இனேஷ் ராஜா

13/09/2010

உலகப் பூ

உலகப் பூ
இந்த உலகப் பூ
ஒருநாள்
வெடித்து சிதறத் தான் போகிறது
சிதறிய பூக்களில் சிவந்த பூ ஒன்று
உன் காலடியில் விழுமேயானால்
அது என் இதயப் பூவாய்தான் இருக்கும் .
------------------------------------------------------யாரோ ஒரு இறந்த காதல் ஜோடியைப் பற்றி தினத்தந்தியில்  பத்து வருடங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது.தன் காதலியோடு இறந்த ராஜ்குமார் என்பவரின் டைரியில் இருந்த கவிதை என  பிரசுரித்ததில் மனதில் ஆழமாக பதிந்த கவிதை.