அன்புடையீர் வணக்கம்,
- [அ] நான் இந்தப்பதிவை சுய
விளம்பரத்திற்காகப் போடவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நான்
பணிபுரியும் நிறுவனத்தில் உள்ள திரு.
Selvam Chandran
என்ற நண்பர் வருடாவருடம் பள்ளிகளில் செய்யும் அறப்பணிகளை முகநூலில்
போட்டிருந்ததைக் கண்டேன். நாமும் அதேபோல் எதாவது செய்யவேண்டும் என்ற
உள்ளுணர்வு எனக்குள் ஏற்பட்டது.
- [ஆ] அதன் விளைவாக, இந்த வருடம்
நம்மால் முடிந்த ஒரு சிறு அன்பளிப்பாக எதாவது செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தில், என் நண்பரும் ஆசிரியருமான திரு.
Siva Thamilappan
அவர்கள் பணிபுரியும் திருவேலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் அனைத்து
மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்க கேட்டுக்கொண்டேன்.
தலைமையாசிரியர் அவர்களின் ஒப்புதலுக்கிணங்க நேற்று (07.04.2018) பள்ளியில்
திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு
தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் ஒரு நண்பர் வழங்கிய தமிழ்-ஆங்கில
அகராதியும் திருக்குறள் புத்தகத்தோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ளது என்பதைக்
கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், அந்தப்பள்ளியை நவீன வசதிகள்
கூடிய பள்ளியாக மாற்றும் முயற்சியில் அங்குள்ள தன்னார்வலர்கள்
இறங்கியுள்ளனர் என்ற செய்தியும் மனமகிழ்வைத் தருகிறது.
- [இ] என் எண்ணத்தை செயல் வடிவமாக்கிய என் நண்பர் சிவக்குமாருக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் திரு.
Rengasamy Rajamani அவர்களுக்கும் மற்றும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
- [ஈ] இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியாமல் செய்வதே அறம் என்பர்.
நான் இதைத் தெரியப்படுத்துவதற்கான நோக்கம் திருக்குறளின்
முக்கியத்தவத்திற்காக மட்டுமே என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
- [உ] தமிழரின் புனிதநூலான திருக்குறளை இறைவனின் நூலாக மதித்து அதன்படி வாழ நம் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிப்போமாக.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
#குறளறம்_1
#திருக்குறள்_100_புத்தகங்கள்_வழங்குதல்
#திருவேலங்குடி_தொடக்கப்பள்ளி