தொழிற்சாலைகள்
கட்டுவதற்காக நியமித்த என்னிடம் தனக்கான அனைத்து வேலைகளையும்
வாங்கிக்கொண்டார் என் முதலாளி. அப்படி வாங்கிய வேலைகளில் ஒன்றுதான்
நீச்சல்குளம் அமைக்கும் பணியும். தொழிற்சாலைப் பணிகள் முடியும் தருவாயில்
திடீரென்று ஒருநாள் என்னை முதலாளி தலைமை அலுவலகம் வருமாறு அழைத்திருந்தார்.
அங்கே ஏற்கனவே டில்லியில் இருந்து வந்த ஒரு நபர் அமர்ந்திருக்க ஒரு பெரிய
Swimming pool மற்றும் அதனோடு இணைந்த ஒரு Baby pool வரைபடத்தை என்னிடம்
காண்பித்தார்கள். அதைச் சுத்தம் செய்ய ஒரு கீழ்நிலைத்தொட்டி மற்றும்
வடிகட்டும் இயந்திரம் (Filter tank) அடங்கிய அமைப்பு, இதுபோக நீச்சல்
தொட்டியில் குளித்தவுடன் மீண்டும் குளிக்க ஒரு குளியலறை, அதையொட்டி
விருந்தினர் அறை மற்றும் Billiards என்னும் பந்து விளையாட்டறை..
இவையெல்லாம் வெளியே தெரியாமல் இருக்க கேண்டிலீவர் அமைப்பில் பீம் கொண்ட
தூணமைத்து அதன்மேலே ஒளி ஊடுருவும் கூரை அமைக்க வேண்டும்.....இப்படி
அனைத்தையும் விரிவாகச்சொன்னார்கள்.
இதையெல்லாம் கேட்டபிறகு, நான்
முதலாளியிடம் எனக்குத் தனியாக 50,000 ரூபாய் இப்பணிக்காக வேண்டுமென்று
கேட்டேன். (அப்போதெல்லாம் எவ்வளவு கேட்க வேண்டுமென்றுகூட தெரியாது...அட
இப்போதும்தான்) உடனே சம்மதம் தெரிவித்தார். ச்சும்மா சொல்லக்கூடாது, நான்
அஸ்ஸாமைவிட்டு வரும்போது கேட்டதைவிட அதிகமாகவே கொடுத்தார். ஆம்... அந்த
வேலைகளைச் செய்ய வந்த டில்லிக்காரர் மொத்த வேலையையும் தானே செய்வதாக
நினைத்துதான் வந்திருந்தார்போலும். பாவம்...மெக்கானிக்கல் வேலை மட்டும்
அவரிடம் கொடுத்துவிட்டு மற்ற அனைத்து வேலைகளையும் என்னிடம்
கொடுத்துவிட்டார் என் முதலாளி. வந்தவர் எத்தனை மாதங்கள் சிவில் வேலைகளுக்கு
எடுத்துக் கொள்வீர்கள் என்று நக்கலாகக் கேட்டார்?! உடனே முதலாளி என்னைக்
காண்பித்து... இவர் யார் தெரியுமா?!....எங்க சிவில் இஞ்சினியர்... இவருக்கு
ஒரு மாதம் போதும் என்று... அவரிடம் பெருமையாகவும் சற்றே செருக்கோடும்
பேசினார். நமக்கு உள்ளூர சந்தோசம் என்றாலும் கூடவே ஒருவித அச்சம் கலந்த
பயமும் இருந்தது. அவர் ஆச்சரியமாகப் பார்த்தார்.....நான் இதற்கு முன்பு
Swimming pool செய்திருக்கவில்லைதான் ஆனால். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு
தைரியம் எங்கிருந்தோ வந்துவிடும். இரவு பகல் பாராமல் தொடர்ந்து வேலை செய்து
வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தேன். சென்னையில் Consultantஆக உள்ள என்
நண்பன் APS AP Senthil Kumar
) யிடம்தான் அவ்வப்போது சந்தேகங்களைக் கேட்டுக்கொள்வேன். இப்போதுவரை
அவன்தான் என்னிடம் பணம் வாங்காத personal consultant என்றால் அது மிகையல்ல.
நன்றிடா நண்பா...
அது ஒரு நல்ல அனுபவம். இத்தாலியன் டைல்ஸ், unter
water lighting, வயதானவர்கள் நீர் தொட்டிக்குள் அமர்ந்திருக்கும் போது
அவர்களின் முதுகில் மஸாஜ் செய்வதுபோன்ற அமைப்பு, வெளியே டெரகோட்டா
டைல்ஸ்....என் பார்த்துப் பார்த்து செய்து அதில் தண்ணீர் நிரப்பி
விட்டார்கள். முதன் முதலில் சோதித்துப் பார்க்க நான் குளிக்கவா என்று
மேனேஜரிடம் கேட்டபோது... இல்லை இல்லை முதலில் முதலாளியம்மா தான் குளிக்க
வேண்டுமென்று எனக்கான அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சம்பவம்தான் என்னால்
இப்போதுவரை மறக்கவே முடியாத சம்பவம். நானும் அண்ணாமலை படத்தில் ரஜினி
பாணியில் எழுதிவச்சுக்க...இந்த நாள்.. என்றெல்லாம் பேசிவிட்டு..
பிற்காலத்தில் நாமும் ஒரு Swimming pool கட்டவேண்டும் என்றெல்லாம்
நினைத்தேன். அப்புறமென்ன?!.. அதை ஏன் கேட்குறீங்க. சிரிப்புதான் வருகிறது.
அதெல்லாம் உலகியல் சம்பந்தப்பட்டதென்று என் நினைவில் இருந்தே
அகன்றுவிட்டது. (ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்).
அவ்வப்போது அந்த நீச்சல் குளத்தில் சினிமா ஒளிப்பதிவு நடப்பதாகச் சொல்லும்போது எனக்கும் மிக மகிழ்ச்சியாகவே இருக்கும்.
அஸ்ஸாமில்
அந்த நேரத்தில் இணையதள வசதி வேண்டுமென்றால் ஒரு 50 கிமீ தாண்டி கோல்பாரா
போக வேண்டும். பிறகு மன்மோகன் சிங் தயவால் கிராமப் பஞ்சாயத்துக்களில் அங்கே
அந்த வசதி வந்தது. உண்மையில் அந்த ஊர்களில் அதைப் பயன்படுத்திய ஒரே ஆள்
நானாகத்தான் இருக்கும். துத்னையில் இருந்து மட்டியாவில் உள்ள பஞ்சாயத்து
அலுவலகத்திற்கு முன்கூட்டியே நான் வருவதாகப் போன்செய்துவிட்டுச் சென்றால்
அவர்கள் ஜெனரேட்டரில் டீசல் போட்டுத் தயாராக இருப்பார்கள். பிறகு எனக்காக
இணையவசதி செய்து தருவார்கள். அங்கிருந்த போதுதான் என் யாகூ கூகுள்
மின்னஞ்சல் முகவரி எல்லாம் உருவாக்கினேன் என்பதால் இன்னும் civilrajaassam
என்றே என் முகவரிகள் இருக்கின்றன. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்,
இவ்வளவு கஷ்டங்களுக்கிடையேதான் நான் வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி
செய்தேன் என்பதைச் சொல்வதற்காகவே.
அஸ்ஸாமில்தான் நன்றாகப்
போகிறதே....பிறகு ஏன் வெளிநாடு போகவேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம்.
உண்மைதான்.. ஆனால் கொடுக்கும் சம்பளம் மிகக்குறைவாயிற்றே.. மேலும், எவ்வளவு
அடைத்தாலும் அப்பாவின் கடன் அடைய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறதே....அட
நாமும் ஒரு வீடாவது கட்ட வேண்டாமா....?! இப்படில்லாம் கனவு வந்துகொண்டே
இருந்ததால் மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். மலேசியாவில் உள்ள சோமய்யா
அவர்களின் உதவியால் ஒரு வேலை கிடைப்பதாக இருந்தது. சரி இங்கிருந்தால்
சரிவராது...முதலாளியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்றால் அவர் விடுவதாக
இல்லை. எவ்வளவோ தடுத்துப்பார்த்தார். ஒரு கட்டத்தில் வலுக்கட்டாயமாக
கூறிவிட்டு கிளம்பி சொந்த ஊர் வந்து விட்டேன்.
ஆனால்....மூன்று
மாதங்களாக முயற்சி செய்கிறேன். மலேசியா வேலையும் கிடைக்கவில்லை, எந்த
வேலையும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மீண்டும் முதலாளியிடம் இருந்து ஒரு
அழைப்பு வந்தது. அவர் தென்னிந்தியா வருவதாகவும் என்னைக் கேரளாவில் வடக்கம்
பரவூரில் உள்ள சாந்திமடம் வந்து பார்க்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
நானும் நண்பன் சிவாவை Siva Thamilappan அழைத்துக்கொண்டு பழனி வழியாக கேரளா சென்றேன்.
செ.இராசா
08/03/2021
அனுபவப் பதிவு-10---நீச்சல் தொட்டி---Swimming pool----கட்டுரை
மகளிர் தினநன்நாள் வாழ்த்து
மகளாய்ப் பிறந்து மருமகளாய் மாறி
மகளையோ நல்ல மகனையோ பெற்று
மகத்தான வாழ்வுவாழும் மங்கையர்க்(கு) எந்தன்
மகளிர் தினநன்நாள் வாழ்த்து
செ.இராசா
06/03/2021
அனுபவப் பதிவு-9------------------------படிக்காத மேதை சம்சாத்கான்-------கட்டுரை
#அஸ்ஸாம்_மேகாலயா
இளம்வயதில்
கொடுக்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் தவறில்லாமல் செய்பவன் என்ற
மிடுக்கும் செருக்கும் பொதுவாக பலருக்கும் இருப்பதுபோல் எனக்கும் நிறையவே
இருந்தது. ஆனால் அவைகளையும் உடைத்தெறியும் சம்பவங்கள் இரண்டு நடந்தேறின.
ஒன்று
மிகப்பெரும் வெள்ளத்தில் சிம்சாங் என்ற ஆற்றங்கரை அருகே தொழிற்சாலைக்காக
நான் கட்டிய தடுப்புச் சுவர்கள் எல்லாம் உடைந்து ஆற்றோடு ஆறாக போனபோது
ஏற்பட்டது. உண்மையில் இவையெல்லாம் மெருவெள்ளத்தில் சகஜமான ஒன்றுதான் என்றே
முதலாளி கூறினாலும் நான் கட்டிய ஒரு கட்டுமானம் உடைந்ததை என்னால் மட்டும்
ஏனோ ஏற்க முடியவில்லை. அன்று முதலாளியைவிட நானே மிகவும் வருத்தப்பட்டேன்.
அதற்கெல்லாம் காப்பீடு மற்றும் சலுகைகள் அரசாங்கம் கொடுத்தாலும் நம்
மேற்பார்வையில் கட்டிய ஒன்று காணாமல்போய்விட்டதே என்ற வருத்தம்தான்
எனக்கிருந்தது. ஆக நமக்கும்மேல் ஒரு ஆண்டவன் இயற்கையின் சக்தியாய்
இருக்கிறான் என்பதை மறக்கும்போதெல்லாம் அவன் ஒரு குட்டு குட்டத்தான்
செய்கிறான்.
ஆனால், அடுத்த சம்பவம் டில்லி சாகாரன்பூரைச் சேர்ந்த
சம்சாத்கான் என்னும் ஒரு படிக்காத மேதையால் உணர்த்தப்பட்டது. அவர்விட்ட
சவாலில் தோற்று என்னை அழுஅழுவென்று அழுக வைத்தது. அது என்ன தெரியுமா?!
சொல்கிறேன்....
நானோ BE படித்து முறையாக சிலபேரிடம் வேலைகளைக் கற்றுக்கொண்டு படித்ததன்
அடிப்படையில் வேலை பார்க்கிறவன். ஆனால் நண்பர் சாம்சத்கானோ கைநாட்டு, ஆனால்
இரும்புத் தூண்கள் மற்றும் சிமெண்ட் ஆலைக்குத் தேவையான அனைத்து
இயந்திரங்களையும் தூக்கி வைக்கும் வேலையை பரம்பரை பரம்பரையாக செய்பவர்கள்.
இதைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. Steel Design மட்டும் தான்
பொறியாளர்கள் செய்வார்கள். அதைவைத்து fabrication அறிந்த யாரும்
செய்துவிடலாம். ஆனால் Erection என்று சொல்லப்படும் வேலை அனைவராலும்
முடியாது. அதற்கு வெறும் பட்டறிவு பயன்படாது. அனுபவ அறிவே பயன்படும். அது
தெரியாமல் நானும் அவரும் பேசும்போது என்னிடம் ஒரு சவால் வந்தது. அதாவது
நான் கட்டிய அனைத்துத் தூண்களின் மேல் மட்டமும் மிகச்சரியான உயரத்தில்
உள்ளதென்றேன். அவர் முதல் தூணிற்கும் கடைசி தூணிற்கும் இடையே பெரிய அளவில்
உயர வித்தியாசம் உள்ளதென்றார். நான் இல்லவே இல்லை என்றேன். நிருபித்து
காட்டி என்னைத் தலை குனிய வைத்தார். அறையில் சென்று தேம்பி தேம்பி அழுதேன்.
என்னை ஓடோடிவந்து தேற்றினார். இதெல்லாம் வேலையில் சகஜமென்று கூறி அதை
அவ்வளவு எளிதாகச் சரிசெய்தார். அதைச் சரி செய்யாவிட்டால் தூணிற்கு மேலே
ரயிலில் ஓடும் கிரேனை இயக்க முடியாது. அதைச் சில Steel plates கொடுத்து
packing செய்து சரி செய்துவிட்டார். அன்று முதல் என் அன்பு நண்பராகவும்
மாறிவிட்டார். அவரின் திறமையைப் பல கட்டங்களில் கண்டு வியந்துள்ளேன்.
ஒரு
முறை சிமெண்ட் மில்லைத் தூக்கி வைக்கும் சவால் ஒன்று அவரிடம் வந்தது. ஏன்
சவால் என்கிறேன் என்றால், மிகப்பெரிய கிரேன் வந்தால்தான் தூக்கி வைக்க
முடியும். ஆனால் மேலே கூரையெல்லாம் போட்டாகிவிட்டது. மீண்டும் கூரைகளைப்
பிரிக்க முடியாது. கிரேனும் வர முடியாது. தூரத்தில் இருக்கும் சிமெண்ட்
மில்லை (40-50மீ நீளம் 2-3மீ விட்டம்) நகர்த்தி பவுண்டேசன் மேல் தூக்கி
வைக்க வேண்டும். எப்படி முடியும்?!. முடியும் சாம்சத்கானால் முடியும்.
மூன்றே நாட்களில் வெறும் chain block மற்றும் சில ஜுகார்டுகள் செய்து
முடித்துவிட்டார். ஆக..BE பொறியியலில் படிக்கா பாடத்தை நான் சாம்சத்கானிடம்
படித்தேன் என்றால் அது மிகையல்ல. அதுமட்டுமா.... ஹிந்திப்படமே பார்க்காத
என்னைக் கட்டாயப்படுத்தி கே.பாலச்சந்தர் இயக்கிய கமல்ஹாசன் நடித்த "ஏக்
துஜே கேலியே" காண வைத்தார். அன்றுமுதல் ஹிந்திப் படங்களும் காண
ஆரம்பித்தேன்.
அஸ்ஸாம் வந்து பலநாட்கள் ஆகிவிட்டதால், ஊருக்குப்
போகும் ஆசை வந்தது. முதலாளியிடம் தெரியப்படுத்தியபோது, தன் வீட்டில் ஒரு
Swimming pool with Billiards வசதியுடன் செய்துதரச் சொன்னார். அப்போதுதான்
முதன்முறையாக அதற்கெல்லாம் தனியாக பணம் தரவேண்டும் என்று கூறினேன்.
கூறியதும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?!
05/03/2021
வாராயோ.....நீ...வாராயோ
அனுபவப் பதிவு-8-------------நேர்மையின் சோதனை----கட்டுரை
03/03/2021
சின்னம்மா
சின்னம்மா செய்த சிறப்பான சம்பவத்தால்
என்னம்மா செய்வீர் இனி?
#சபாஷ்_சரியான_போட்டி
#அரசியலைவிட்டே_விலகுகிறார்
முதன்முறையாக மனமார வாழ்த்துகிறேன்
செ.இராசா
02/03/2021
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி--தினேஷ்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
வெள்ளை மனசோட
...........வெள்ளந்திப் பேச்சோட
கொள்ளை அடிச்சாயே
.............கூடிநீ- உள்ளத்தைக்
கள்ளம் கபடமின்றி
.............கண்ணில் பிழையுமின்றி
கொள்ளும் கலைபற்றிக் கூறு!
இத்தனைநாள் ஆனபோதும்
..............இன்னமும் மாறவில்லை
எத்தனைநாள் ஆனபோதும்
..............இப்படியே- சத்தியமாய்
உத்தமனாய் வாழ்கின்ற
..............உண்மைக் கலைபற்றி
அத்தனையும் எனக்காய் அளி!
சீறும் சிறப்போடும் செந்தமிழ்ப் பண்போடும்
மாறும் குணமின்றி வாழ்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி
அனுபவப் பதிவு-7-----------கடத்தல் திட்டங்கள்---கட்டுரை
01/03/2021
அனுபவப் பதிவு-6-------பில்லிணியம் சிமெண்ட்ஸ் அனுபவம்---கட்டுரை









