ஏ-ஐயில் செஞ்சவளே...
.....என்னாம்மா கீறநீ
வைஃபைக்கு வந்தவளே
.....வார்த்ததுயார்- ஹைஃபையா
உன்னால பாருயிப்ப
.....ஊருல வேலைபோய்
என்னென்ன ஆகுமோ
..... இங்கு?
செ. இராசா
ஏ-ஐயில் செஞ்சவளே...
.....என்னாம்மா கீறநீ
வைஃபைக்கு வந்தவளே
.....வார்த்ததுயார்- ஹைஃபையா
உன்னால பாருயிப்ப
.....ஊருல வேலைபோய்
என்னென்ன ஆகுமோ
..... இங்கு?
செ. இராசா
அப்பா அமரப்பா அப்புறம் பேசலாம்
தப்புப்பா நிற்காதே தப்பு
(1)
அப்பா அமர்வதில்லை அப்படித்தான் நின்றிடுவார்
எப்போதும் இஃதே இயல்பு
(2)
உட்காரச் சொல்லி உரைத்தாயா என்றேனும்
கட்டாதே நன்றாய்க் கதை
(3)
மரபினை மாற்றுவது நல்லதில்லை தம்பி
கரம்கூப்பி மன்னிப்பு கேள்
(4)
இனியும் இதுபோல் எகத்தாளம் வேண்டாம்
கனிவுடன் பேசிடக் கல்
(5)
புரட்சி புடலங்காய் புண்ணாக்கு பேசாய்
சிரம்தூக்க ஏதேனும் செய்
(6)
எங்கய்யா விட்டீர்கள் எப்போதும் எங்களை
நொங்கவே பார்க்கின்றீர் நீர்
(7)
ரத்தத்தில் ஊறியது ராத்திரியில் மாறிடுமா?
புத்திக்குள் போகாது போ
(8)
இப்படியே பேசிநீர் இப்படியில் நில்லுங்கள்
அப்படியைத் தாண்டிவிட்டோம் யாம்!
(9)
தாண்டினால் பின்னேன் தலைகுனிந்து கேட்கின்றாய்
வேண்டாமல் காட்டிடுவாய் வென்று!
(10)
செ. இராசா
இருவர் தந்த இரவலே
இந்த உடம்பு...
இறைவன் தந்த இரவலே
இந்த உயிர்...
உலகம் தந்த இரவலே
நம் உடைமை...
இங்கே...
அத்தனை இரவல்களுக்கும்
ஓர் கணக்குண்டு...
மறவாதீர்...
நீங்களாகத் தராவிட்டாலும்
அவை கட்டாயம் வசூலிக்கப்படும்
செ. இராசா
நடக்க நடக்கத்தான்
இடம்பெயர்தல் நடக்கும்..
நடக்க நடக்கத்தான்
ஞாலம் புலப்படும்....
நடக்க நடக்கத்தான்
ஞானம் வசப்படும்...
அன்று
மனித சமுதாயம் மட்டும்
நடவாமல் நின்றிருந்தால்
இங்கே என்னதான் நடந்திருக்கும்?
எவரெஸ்டை எட்டிய
எட்மண்ட் ஹிலாரியும்
சந்திரனை எட்டிய
ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரினும்
நடந்து நடந்துதானே
இலக்கை எட்டினர்...
காந்தி நடந்த நடையைக்
கணக்கிட முடியுமா?
தண்டி யாத்திரையோ
தண்ட யாத்திரையோ...
அவை...
நடப்பவரின் எண்ணம் பொறுத்தே..
ராஜசேகர ரெட்டியோ
ராகுல்காந்தியோ?!
வை கோபால் சாமியோ
ஈ வே ராமசாமியோ
எல்லாம்....
நடப்பவரின் திண்ணம் பொறுத்தே...
இங்கே
எந்த உயிரினமும் நம்மைப்போல்
நடக்கத் தாமதிப்பதில்லை...
நாம் மட்டும்தான்
புரள சில மாதம்
தவழ சில மாதம்
அமர சில மாதம்
நிற்க சில மாதம்
நடக்க சில மாதமென்று
நாட்கள் பல எடுத்துக்கொள்கிறோம்
ஆரம்பத்தில் என்னவோ
நன்றாகத்தான் நடந்தோம்
பிறகு நடந்ததென்ன?
அங்கே போகாதே
இங்கே போகாதேயென்று
டிவி கொடுத்தோம்
டேப் கொடுத்தோம்
விளையாட்டை நிறுத்தி
வீடியோகேம் கொடுத்தோம்...
கூடவே...
குண்டான தேகம் கொடுத்தோம்
நாம் மட்டும் என்னவாம்?
அன்று அப்படி இப்படியென்று
நடந்த கதைகளையே பேசிப்பேசி
நடக்கும் தூரத்திற்குக்கூட
வண்டி தேடுகிறோம்...
முடிவு?
மருத்துவமனையில்
சர்க்கரை அளவை சரிபார்க்கிறோம்
அவரோ நடக்கச்சொல்கிறோர்
நாமோ நடக்கும் காரியமா என்றபடி
காரியம் நடக்காமல் இருக்க
உடனே நடக்க நினைக்கிறோம்..
பிறகு நடப்பதென்ன?!
வெயிலென்றும் மழையென்றும்
பனியென்றும் குளிரென்றும்
ஏதேதோ சொல்லிவிட்டு
நடக்க முடியவில்லையென்று
மீண்டும் நடக்கிறோம்
மருத்துவமனைக்கு...
எனில் என்னதான் செய்ய?
சரி....
வாங்க நடப்போம்!
செ. இராசா
இத்தனைநாள் ஆகிடுச்சே... என்னப்பா செஞ்சிருக்க
செத்தழிஞ்சு போகும்முன் செய்!
(1)
செய்செய் எனநானும் செய்துதான் பார்க்கின்றேன்
செய்வினைக்கு எங்கே சிறப்பு?!
(2)
சிறப்பை எதிர்பார்த்து செய்யாமல் நாளும்
பொறுப்புடன் செய்தால் புகழ்!
(3)
புகழுக்காய்த் தானா புனைகின்றேன் இல்லை
அகவுணர்ச்சி தானே அது
(4)
அதுதான் இலக்கென்றால் ஐயமென்ன உன்னுள்
புதுப்புது யுக்தியுடன் போ
(5)
போகின்ற பாதையில்தான் போகின்றேன் என்றாலும்
போகுமிடம் சேரவில்லைப் போய்
(6)
போய்விட்டு சொல்லாதே போனவழி தப்பென
ஆய்ந்தறிந்து போனால் அழகு
(7)
அழகாகக் காய்நகர்த்தி அத்தனையும் செய்தும்
விழலுக்கு இறைத்தநீர் வீண்!
(8)
வீணருடன் கூடி விரையங்கள் செய்யாமல்
ஆனவரை செய்வாய் அடுத்து
(9)
அடுத்தடுத்து மேலேறி அப்படியே போனால்
எடுத்தசெயல் போய்விடுமா இத்து?!
(10)
செ. இராசா
சாதியத்தைத் தூண்டிவிட்டுக்
.....காசுபார்க்க எண்ணுறான்!
நாதியற்ற பேர்களென்று
......நல்லவன்போல் காட்டுறான்!
ஊதிநன்கு பற்றவைத்து
.....ஞானியைப்போல் பேசுறான்
மீதியுள்ள நல்லபேரும்
.....மாறயெண்ணி செய்யுறான்!
செ. இராசா