19/03/2019

மாதவ ஹைக்கூ

மூன்றாம் அடியிலே//
ஓங்கி அடிக்கிறது//
மாதவ ஹைக்கூ//

(இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்டா தம்பி-வெண்பா_5



இல்லையென்று சொல்லா இளவலே; அன்பினை
எல்லையிட்டு தள்ளா இளைஞனே- எல்லோரும்
இன்றைக்கு வாழ்த்தும் இனிதான நன்னாளில்
என்றைக்கும் வாழ்த்துவேன் நான்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்டா தம்பி!!!
— with Sri Vinoth Kannan.

18/03/2019

கல்வியின் பயன் (குறளின் குரலாய்)


கற்கா காலம் கற்காலம்!
கற்ற காலம் தற்காலம்!
அறிவில் சிறந்தது எக்காலம்?
அறிவின் உயர்வே பொற்காலம்!


கற்றதில் வருவது
...........அறிவென்றால்-உயர்
அறிவில் நிற்பது அறமாகும்!

அறத்தின் உச்சம்
...........அன்பென்றால்- உயர்
அன்பின் உச்சம் அருளாகும்!

அருளில் பெருவது
............துறவென்றால்-உயர்
அருளால் உணர்வது இறையாகும்!

✍️செ. இராசா

17/03/2019

உப்பு அதிகமென்று//
எப்போதும் சொல்வதில்லை//
கடல் மீன்கள்!
(நல்ல கணவன்களும்...)✍️

வாழ்க பூனையாரே...



கண்ட இடம் சொர்க்கமென
கண்மூடி உறங்குகின்றாய்.
சொந்த இடக் கவலையின்றி
சுகமாக இருக்கின்றாய்..

எப்போது தேவையோ
அப்போதே கொள்(ல்)கின்றாய்
குப்பையில் பிறந்தாலும்
குபேரனாய் வாழ்கின்றாய்..

வாழ்க பூனையாரே...

16/03/2019

மரு வைத்த MGR கதைகள்

நிறம் மாற்றி வந்து ஏமாற்றிய நரி கதை சொன்னால்...உருவத்தைப் பார்த்து ஏன் அடையாளம் கொள்ளவில்லை என்கிறாள் மகள். அவளுக்குத் தெரியுமா வெறும் மரு வைத்த MGR கதைகள்

பாலில் மறைந்த நெய்யைப்போல்



பாலில் மறைந்த நெய்யைப்போல்- உயர்
பாலில் உறையும் தாய்மையன்றோ?!

மதியில் இருண்ட பகுதியைப்போல்- சிறு
மதியில் இருளும் ஞானமன்றோ?

கவியில் களிக்கும் கவிஞனைப்போல்- நான்
கவியில் கவிழும் கிறுக்கனன்றோ?

✍️செ. இராசா

(மடியில் நண்பரின் குழந்தை பெயர் தாரீகன்)

15/03/2019

#அரசியல்_பழகு




என்ன பேசி என்ன ஆகும்
எனக்கு ஒன்னும் புரியல!
வெண்ணை நாயம் பேசிப்பேசி
என்ன ஆகும் தெரியல!

எந்த ஆட்சி நல்ல ஆட்சி
எதுவும் இங்கே சரியில்ல!
ஒன்னு போயி ஒன்னு வந்து
ஒன்னும் இங்கே நடக்கல!

மாறி மாறி ஓட்டுப் போட்டும்
மாற்றம் மட்டும் வரவில்லை!
மாறி மாறி ஆண்ட போதும்
மாற்றிக் கொள்ள நினைக்கல!

வெள்ளைக் காரன் போன போதும்
கொள்ளை குணம் போகல..!
என்ன சொல்லி என்ன செய்ய
எங்க மக்கள் திருந்தல..!

கையக்கட்டி காலில் விழும்
அடிமைக் குணம் போகல...
திராவிடன்னா என்ன வென்று
சரியா நமக்கு சொல்லல?!

✍️செ. இராசா

குறிப்பு:

சொற்களில் உள்ளது சூட்சமம் தமிழா விழித்தெழு...சொற்களைப் கொண்டே ஆள்கிறார்கள்...

தமிழ்- திராவிடம்
கட்டபொம்மன்- கட்டபொம்முலு
பாளையத்துக்காரர்- தெலுங்கர்

(தமிழ்த்தாய் வாழ்த்தில்கூட முக்கியமான வரிகள் நீக்கப்பட்டுள்ளது)

.......இப்படி மாற்றி மாற்றி ஏன் சொன்னார்கள்?

பிரித்துப்பார்ப்பது தமிழனின் குணமல்ல. அனைத்து உறவுகளும் நம் சகோதர உறவுகளே. ஆனால், வரலாற்றை திட்டமிட்டு மறைப்பது குற்றமே. தமிழனின் உயரத்தைச் சொன்னவர்கள், தமிழனின் அரசியல் வீழ்ச்சியை மறைத்த காரணம் என்ன?!
வீழ்த்தியவர்கள் தமிழரல்லாதவர்கள் என்பதாலா?!!

சிந்திப்போம்....

#அரசியல்_பழகு

இனிய திருமணநாள் வாழ்த்துகள்!--சந்திரா_வெண்பா_4



அன்பின் உறவாய் அனைவரின் நண்பனாய்
என்றும் தமிழ்போல் எழிலுறும்- சந்திரா
உண்மை குணத்தால் உயர்கிற உங்களை
உண்மையில் போற்றும் உலகு!

வாழ்க பல்லாண்டு!
இனிய திருமணநாள் வாழ்த்துகள்!

14/03/2019

காமத்தினைக் காதலென்று எண்ணாதே

காமத்தினைக் காதலென்று எண்ணாதே
காதலினைக் காயத்திலே தள்ளாதே

தவறுகள் செய்திடவா
தரணியில் பிறந்து வந்தாய்
வலையிலே வீழ்த்திடவா
வலைத்தள தூது விட்டாய்


மலரினை நசுக்கிட வா
மதியிலே மது உண்டாய்
சிறகினை ஒடித்திடவா
சிரத்திலே விசம் கொண்டாய்

நிர்மூலம் ஆக்கிடவா
நீ எனைக் காதலித்தாய்
விரலிலே தீண்டிடவா
விழியிலே தூண்டிலிட்டாய்

✍️செ. இராசா

#காமத்தினைக்_காதலென்று
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/YGocVG8hBzc