17/10/2025

அவனைப்போல் ஒருவன்

 


அவனைப்போல் ஒருவன்
....அவனியிலே இல்லை
.........அவனுக்கு நிகர்அவனே!
சிவனைப்போல் அவனும்
..... சினம்கொண்டு விட்டால்
..........‌..சிவந்தவிழி கொள்பவனே!
கவிதைபோல் செய்வோர்
......கதையேதும் விட்டால்
............கவியம்பால் கொய்பவனே!
கவிதையிலே நல்ல
.....கவிதைகளாய்ச் செய்த
‌.........கலைதெய்வ ஆண் அவனே! நீர்
.........கலைதெய்வம் ஆனவனே!-

✍️செ. இராசா

கவியரசர் நினைவு நாள் கவிதை

No comments: