29/09/2023

அந்த ஒற்றை வார்த்தைதானே..

 


எப்போதோ விடுமுறையில் வரும்
பேரனுக்காய் பேத்திக்காய்
எப்போதிருந்தோ தயாராகும்
அவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன?
அந்த ஒற்றை வார்த்தைதானே..
அட....
ஐயான்னு...சொல்லுய்யா
அப்பத்தான்னு...சொல்லுய்யா..

✍️செ. இராசா

28/09/2023

ஆயுர்வேத ஆனந்தம்

 


தலைக்கும் தோள்பட்டைக்கும்
ஒரு வித எண்ணெயும்
உடம்பு முழுமைக்கும்
இரு வேறு எண்ணெய்களுமாய்
ஒன்றன்பின் ஒன்றாகச்
சூடுபறக்கத் தேய்த்துவிட்டு
நரம்பையும் சதையையும்
நளினமாய் உறுவிவிட்டு
தலை வெளியிருக்க
உடலை உள்ளேவைத்து
மூலிகை நீராவியில்
முக்கியபடி அமரவைத்து
துண்டால் துவட்டியபின்
மீண்டும் குளித்துவந்தால்
இறந்த செல்கள் நீங்கி
புதிய செல்கள் துளிர்த்து...
அடா...அடா...அடா...
ஆனந்தமோ ஆனந்தம்: அது
ஆயுர்வேத ஆனந்தம்!
 
✍️செ. இராசா

26/09/2023

செந்தமிழ் கொஞ்சிடும் கவியே

 செந்தமிழ் கொஞ்சிடும் கவியே
உன் கோபமும் அற்புத மொழியே
நற்றிணை யாவுன் விழியே
நல்ல நர்த்தனம் ஆடுது தனியே...

தாரகையே நீதான்டி
தாரமென வாயேன்டி
சம்மதத்த தாயேன்டி
சங்கதியச் சொல்லன்டி....என் சொந்தமே நீதான்டி

ஆண்:

மேகதூதம் படிக்க
உந்தன் மேனியைத் உற்றுப் பார்த்திடவா..
வெட்டும் மின்னல் ரசிக்க
கொஞ்சம் புன்னகைக் காட்டிடவா..

பெண்:

எம்மலரும் தேனை ருசிக்க
எந்த வண்டுக்கும் சேதிகள் சொல்லிடுமா?
சந்தோச தியானம் நடத்த
இது உன்தனி மலரல்லவா...

ஆண்:
கற்சிலைக் கவியென மாறி கனவென வந்ததோ முன்னாலே
கண்ணிமை இருப்பது மெய்யா அடிக்கடி பார்க்கிறேன் உன்னாலே..

பெண்:

சொற்பிழை புரிபவன் நீயா? சொற்களின் வித்தகன் நீதானே...
கற்றிட ஆசை எனக்கும் சொல்லிக் கொடுத்திடு என்மானே..

ஆண்:
தந்தானே தகதிமி தானே
தந்தாலே சம்மதந் தானே

பெண்:
பிறந்ததே உனக்கென நானே..
பிறகென்ன அவசரம் வீணே

✍️செ. இராசா

25/09/2023

ரித்திக்கா சர்மா

 


ரித்திக்கா சர்மான்னு
........ரெக்கொஸ்டு தந்தீன்னா
எத்திக்ஸே இல்லாம
.........ஏற்கின்ற- தத்தியல்ல
கீர்த்தியே வந்தாலும்
.........கீர்த்தி இருந்தாத்தான்
சேர்த்திடுவேன் என்நட்பில்
........தேர்ந்து!
 
✍️செ. இராசா

24/09/2023

  


அடிகள் இரண்டில் அளந்து சென்ற
...ஐயன் அடியைத் தொடுகையில்
அடியேன் மனதில் அளவு மீறி
...ஆவல் பெருகி வருகுதே‌!

கதம்ப மாலை கழுத்தில் போட
...கைகள் மேலே உயர்கையில்
கதம்ப மான நினைவு நெஞ்சில்
...காட்சி போல விரியுதே!

✍️செ. இராசா

பெப்சி எதற்கு?

 


இனிய பதநீர் இருக்கின்ற போதில்
இனிதில்லா பெப்சி எதற்கு?
 
✍️செ. இராசா

21/09/2023

நினைப்புதான் பொழப்ப இங்கே கெடுக்குது- நீ

 #மெட்டு_கருப்புதான்_எனக்கு

நினைப்புதான் பொழப்ப இங்கே கெடுக்குது- நீ
நினைக்கும் போதே நல்லா நினைச்சா
நல்ல வாழ்க்கை கிடைக்குது..
நினைப்புதான் பொழப்ப நல்லா கொடுக்குது..

வாழும் நினைப்புதான்
வாழ்வை மாத்தும் இனிப்புதான்
நாளும் நினைப்புதான்
நம்மைச் செதுக்கும் நினைப்புதான்..

உன்னை மாற சொல்லி சொல்லும்போது
மாத்த வேணும் நினைப்புதான்
உசத்தும் நினைப்புதான்...

கனவில் கண்ட நோயைப் பார்த்து

 

கனவில் கண்ட நோயைப் பார்த்து
...களங்கிப் போயி நிக்கிற
மனதில் உள்ள மாயை கூட
...மல்லு யுத்தம் போடுற
தினமும் உந்தன் தேகம் எண்ணி
...தெளிவா நடக்க விரும்புற
சுணக்கம் கொண்டு சும்மா சும்மா
....சுருண்டு.. ஏனோ படுக்குற!
 
✍️செ. இராசா

18/09/2023

எதிரியை வாழ்த்துங்கள்...

 எதிரெதிர் கருத்திருந்தால்
எதிரியென்ற அர்த்தமில்லை..
எதிரொலி வருகுதென்றால்
எதிர்ப்பென்றும் அர்த்தமில்லை..

இங்கே ..
வடக்கென்ற ஒன்றிருந்தால்
தெற்கென்ற ஒன்று இருக்கவே
செய்யும்
இதுவொன்றும் அரசியல் அல்ல
அறிவியல்...

இன்று சரியெனத் தோன்றுவது
நாளை தவறாகலாம்
இன்று தவறெனத் தோன்றுவது
நாளை சரியாகலாம்..
ஆக..
எதிர் நிலைப்பாடெல்லாம்
எதிரி நிலைப்பாடாய் அர்த்தமாகாது..
அப்படி ஆகுமெனில்
நமக்கு நாமே எதிரிதானே...

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

நம் கருத்தை
நாமே மறுதலிக்கவும்
தைரியம் வேண்டும்
இதைச் சொன்னவர் ஓஷோ...

இங்கே...
நாம் எதிரியாக நினையாவிட்டாலும்
நம்மை எதிரியாக நினைப்போரும்
இருக்கத்தானே செய்கிறார்கள்..
உண்மைதான்...
ஆனால்...
ஆதரிப்போரின் சொல்லைவிட
எதிர்ப்போரின் சொல்லில்தானே
எரிபொருள் உள்ளது....
எனில்...
‌எதிரிகளும் மறைமுக
நண்பர்கள்தானே?!

உண்மைதான்...
ஆனால்‌‌....
எதிரிகள்தரும் இன்னல்களை
எப்படி ஏற்பது?!
பகைவர்கள்தரும் பக்கவிளைவை
எப்படி பொறுப்பது?

தீதும் நன்றும் பிறர் தர வாரா
இதுவும் தெரியும் தானே?
ஆனால்
தீதுசெய்யாப் போதும்
தீது வருதென்றால்
யாதுரைப்பது?!

எனில்...அது
இன்றைய புதுக் கணக்கல்ல
நேற்றைய பழைய கணக்கே....
ஆம்...
கழிவதைக் கவனியுங்கள்
அழுவதை நிறுத்துங்கள்
எதிர்ப்பிலே நீந்துங்கள்
எதிரியை வாழ்த்துங்கள்...

வாழ்க வளமுடன்!

✍️செ இராசா

17/09/2023

தொப்பையுரு சக்தித்திருமகன்

 


தொப்பையுரு சக்தித்திருமகன்
வித்தைபல கற்கத்தருபவன்
பக்கம்வர பற்றிப்பிடித்திடு
....அதுபோதும்

எத்தர்பலர் இன்னல்கொடுப்பினும்
சித்தர்நிலை சிந்தையடைந்திட
நித்தம்தொழ தன்னைப்பழக்கிடு
.....நிலைமாறும்

பட்பட்டென பாவம்பொடிபட
சட்சட்டென காலம்கனிந்திட
சட்புட்டென பாதம்பணிந்திடு
.....கணம்மாறும்

பொல்லாயிருள் எல்லாமோடிட
சொல்லாப்புகழ் எல்லாங்கூடிட
சொல்வாயவன் பேரைச்சுகம்பட
.... தினந்தோறும்

இல்லாதினி இல்லாதென்றிட
நல்லோரினி வெல்வாரென்றிட
சொல்லாமலே செய்யுமிறையென
....வருவானே!
....தருவானே!
....அருள்வானே!

✍️செ. இராசா