#ஆச்சரியம்_ஆனால்_உண்மை
முந்தைய
வருடங்களில் எழுந்த அதே சிந்தனைகள் அதே நாளில் அப்படியே எழுவதை நான்
அடிக்கடி உணர்ந்துள்ளேன். பலமுறை அதை எதேச்சையான ஒரு ஒப்புமை (coincidence)
உணர்வார்கவே எண்ணி கடந்து சென்றுள்ளேன். ஆனால் இம்முறை அப்படி கடந்து
போகாமல் அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஆம்.... இரண்டு
வருடங்களுக்கு முன்பாக நான் எழுதிய கவிதையும் இன்று நான் எழுதிய ஒரு
கவிதையும் (நாளைய வள்ளுவர் திங்களுக்காக எழுதியது) ஒரே எதுகையில் (டை)
வந்துள்ளது எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை ஒப்புமை என்று என்னால்
கடந்து போக முடியவில்லை. காரணம் வார்த்தைகளும் ஏறக்குறைய ஒத்துப் போகிறது.
வடிவம் மட்டுமே வேறு.
போன வருடம் எழுதிய கவிதை இதோ;
#தமிழே_வா
*************
இடையூறு செய்யாத எழுத்தை
தடையேதும் இல்லாமல் தா- தமிழே
உடைகட்டி உரையாடும் எழுத்தை
தடைபோட்டு தடுத்தாள வா!
நடைமாற்றி நடிக்கின்ற உறவை
விடையின்றி வெளியேற்ற வா- தமிழே
எடைபோட்டு பார்க்கின்ற உறவை
மடைபோட்டு மறித்தாட வா!
கடையேழு வள்ளல்கள் மனத்தைக்
கொடையாகக் கொடுத்தாள வா!-தமிழே
குடைபோல காக்கின்ற குணத்தை
அடைகின்ற ஞானத்தைத் தா!
செ. இராசா
29/08/2021
அதே நாளில் அப்படியே
27/08/2021
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு மெட்டு
(என்னமோ
தெரியலைங்க... இன்று காலை திடீரென்று இந்தப்பாடலின் மெட்டு மனதிற்குள்
எழுந்து அதுவே வரிகளாக உதயமானது.... இதுபற்றி சத்தியமா எனக்கெதுவும்
தெரியாதுங்க)
குற்றம் கொண்ட நெஞ்சம் நம்மைக் கொல்லும் நண்பா- நீ
கோபப்பட வேண்டாம் கொஞ்சம் கேளு நண்பா
உப்பை தின்றால் தண்ணீர் என்றும் தேவை நண்பா- நீ
தப்பைச் செய்தால் தண்டனைகள் கிட்டும் நண்பா
செ. இராசா
25/08/2021
23/08/2021
உயிர்க்கொலை தீது ---- வள்ளுவர் திங்கள் 173

கொலைசெய்து கோவாகி கோலோச்சு வோரை
கொலைசெய்தே கொன்றிடுவான் கூற்று
(1)
இறைவன் பெயரால் எவரையும் கொல்வோர்
இறைபொருள் காணா இடர்
(2)
உயிரைப் பறிக்கும் உரிமை எடுத்தால்
உயிரைப் பறித்துவிடும் ஊழ்
(3)
சாதி மதமென்று சங்கை அறுப்போர்க்கு
நாதி எதுவுமில்லை நம்பு
(4)
குத்திய கத்தியது கொல்லாமல் விட்டாலும்
குத்தியதால் அஃதும் கொலை
(5)
கொள்கை புரியாரைக் கொல்வதுதான் தீர்வென்றால்
உள்ளவர் யாரோ உரை
(6)
அடுத்தவர் கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால்
எடுப்பாரா ஆயுதம் இங்கு
(7)
கண்முன் இருப்பதைக் காவிடும் புல்லர்கள்
கண்ணோட்டம் இல்லாத கல்
(8.)
உயிர்வதை செய்வதை ஊக்குவிப்போர் எல்லாம்
உயிர்க்கொலை செய்வோர்க்கே ஒப்பு
(9)
மதங்கள் கடந்து மனிதத்தைக் காண்போர்
அதர்மம் விளையார் அறி
(10)
---செ. இராசமாணிக்கம்--
#வள்ளுவர்_திங்கள்_173
22/08/2021
மரியாதை
இந்த ஔவையின் கூற்று
அறிவுறுத்துவதென்ன?
மரியாதை தராதவர்களை
மதிக்க வேண்டாம் என்பதுதானே...
ஆம்... ஆனால்
கேட்டுப்பெறுவதல்ல மரியாதை
கேட்காமல் கிடைப்பதே மரியாதை
இருந்தும்...
இந்த மரியாதை...
இப்போது எங்கே போனது??
புலியைப் பார்த்து
பூனைகள் சூடுபோட்டால் பரவாயில்லை!
பூனைகளைப் பார்த்து
புலிகள் சூடுபோடலாமா?!
நம்மைப் பார்த்து
அந்நியர் மாறாவிட்டாலும் பரவாயில்லை!
அந்நியரைப் பார்த்து
நம்மவர் மாறலாமா?
பன்னாட்டு நிறுவனங்களில்
பணி புரிந்தால்
பணிவென்பது பறந்துவிடுமா?!
பேர் சொல்லத்தானே
பேர் என்று சொல்வோர்கள்
பெற்றார் பெயரையும்
பேர் சொல்லிதான் அழைப்பரா??
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...
நம் தமிழ் மொழியில் மட்டும்தான்
நவில்கின்ற சொற்களில்
நயம் மிகுந்த பொருள் அதிகம்!
#வா என்ற சொல்லை
வா..வாடா...வாங்க..என்று
வயதுக்கேற்றார்போல்
வரிசைப்படுத்துதல் என்பது
வெறும் வார்த்தைகள் அல்ல..அவை
மரியாதையின் படிநிலைகள்!
ஆனால்...
ஆவ்...ஆயியே...என்கிற
இருநிலைகள் மட்டும்தான்
இந்திக்கு உண்டு!
கம்...என்று கதைக்கிற
ஒற்றை நிலைதான்ஆங்கிலத்திற்குண்டு!
இங்கே....
மொழி வெறும் மொழியல்ல
அது பண்பாட்டின் அடையாளம்...
இனியாவது மொழியுங்கள்
மரியாதையுடன்..
இல்லையேல்...
...
....
மரியாதை
கெட்டுப் போய்விடும்!
செ. இராசா
21/08/2021
தமிழே இல்லாமல் தமிழ் பேசுறான்
தமிழ் கேரளர் சால்பு
வருடம் தவறாமல் வந்திடுவார் என்றே
வருக வருகவென வாழ்த்தும்- திருநாள்
மகாபலி சேரனின் மாண்பினைச் சொல்லும்
சகோ-தமிழ் கேரளர் சால்பு
செ. இராசா
#இனிய_ஓணம்_திருநாள்_வாழ்த்துகள்
#HAPPY_ONAM
20/08/2021
சமையல் ருசி - அல்சர்க்கா (#ALZARKA)




