31/07/2019
பாராட்டும் பண்பு
பாராட்டும் பண்பு பழக்கத்தில் வந்திட
பாழாகும் தீதான பண்பு
✍️
(பாராட்டும் உள்ளத்தில் பொறாமை குடியேறாதாம்)
பாழாகும் தீதான பண்பு
✍️
(பாராட்டும் உள்ளத்தில் பொறாமை குடியேறாதாம்)
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்--RAMESH DEVAR
நகரம் பட்டியில்
அகரம் போட்டு- நீ
தஞ்சை மண்ணிலே
தஞ்சம் புகுந்தாய்!
தகர வறுமையைத்
தங்க மாக்கி- நீ
சிங்கை மண்ணிலே
சிகரம் தொட்டாய்!
உகரக் கடவுளின்
உதவி பெற்று- நீ
உன்னை நம்பியே
உயர்ந்து நிற்கிறாய்!
வாழ்க வளமுடன் தம்பி!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐💐💐
(கஷ்டத்திற்கே கஷ்டம் கொடுத்து இன்று சிங்கப்பூரில் பல உணவகங்கள் நடத்தி உலகளாவில் விரிவுபடுத்த உள்ள அன்புக்குரிய தம்பி Ramesh Devar அவர்கள் (#சிந்தாமணி) வாழ்வு நம் போன்ற அனைவருக்கும் ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல. உண்மை)
குறள் 623:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
மு.வரதராசன் விளக்கம்:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
— with Ramesh Devar.அகரம் போட்டு- நீ
தஞ்சை மண்ணிலே
தஞ்சம் புகுந்தாய்!
தகர வறுமையைத்
தங்க மாக்கி- நீ
சிங்கை மண்ணிலே
சிகரம் தொட்டாய்!
உகரக் கடவுளின்
உதவி பெற்று- நீ
உன்னை நம்பியே
உயர்ந்து நிற்கிறாய்!
வாழ்க வளமுடன் தம்பி!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐💐💐
(கஷ்டத்திற்கே கஷ்டம் கொடுத்து இன்று சிங்கப்பூரில் பல உணவகங்கள் நடத்தி உலகளாவில் விரிவுபடுத்த உள்ள அன்புக்குரிய தம்பி Ramesh Devar அவர்கள் (#சிந்தாமணி) வாழ்வு நம் போன்ற அனைவருக்கும் ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல. உண்மை)
குறள் 623:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
மு.வரதராசன் விளக்கம்:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
30/07/2019
பகிர்ந்து உண் (குறளின் குரலாய்)
பகிர்ந்து உண்ணும் பண்பிருந்தால்
அகிலமே உந்தன் வசமாகும்!
தனியாய் உண்ணும் குணமிருந்தால்
தனிமையும் உனக்கு விசமாகும்!
விரும்பிய உறவை வரவேற்று
விருந்து அளிப்பதே வாழ்வாகும்!
விருந்து என்கிற பயமின்றி
இருப்பதைப் பகிர்வதே சிறப்பாகும்!
காகத்தைப் போலே பகிர்பவர்க்கு
யாக தர்மங்கள் தேவையில்லை!
வெந்ததைத் தனியாய்த் திண்பவர்க்கு
எந்த பந்தமும் நிலைப்பதில்லை!
✍️செ. இராசா
29/07/2019
அண்ணாமலை அப்பா!---இன்னா தொலையவைத்தாய்! என்”நான்” புரியவைத்தாய்!!
எல்லாமும் எப்போதும்
எல்லோர்க்கும் கிட்டாது!
எப்படியோ சிலசமயம்
எப்போதோ கிட்டினாலும்
வாய்க்கு கிட்டியது
வயிற்றுக்கு எட்டாது!
அடிமுடி இல்லாதோன்
ஆலயம் போக வேண்டி
அடியேனின் வாழ்க்கையிலும்
அடிமனதில் ஓர் விருப்பம்...
அவ்வாசை முழுமையாய்
அன்றைக்கு நடக்கவில்லை..
காலம் வரும் வரைக்கும்
காய்கள் காய்வதுபோல்
காலன் வரும் வரைக்கும்
காய்வோன் காய்வதுபோல்
காத்திருந்த மூடனுக்கு
காட்டிவிட்டாய் இன்று!
அண்ணாமலை அப்பா!
உண்ணாமுலை அம்மா!
என்னா அழகய்யா..
என்னா அழகு!!
இன்னா தொலையவைத்தாய்!
என்”நான்” புரியவைத்தாய்!!
இனிநான் நானில்லை
இனிநீ வேறில்லை
...
(சீவனே சிவன்)
✍️செ. இராசா
*நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி
நினைத்தாலே முக்திதரும் ............நிமலனைத் தேடி!
நினைத்தாலே முக்திதரும்
............நிமலனைத் தேடி!
வினைநீக்க வந்திங்கு
...........வேண்டுபவர் கோடி!
ஈகைமிகு நாயகனாம்
...........ஈசனைத்தேடி!
வாகைபல சூடிடவே
..........வந்தவர்கள் கோடி!
அண்ணா மலையானின்
...........ஆசியினைத் தேடி!
உண்ணா திருந்திங்கு
...........ஓடிவந்தோர் கோடி!
விண்ணாளும் மண்ணாளும்
.............வித்தகனைத் தேடி!
எந்நாளும் எப்போதும்
...........ஏங்குபவர் கோடி!
✍️ஓம் நமசிவாய
28/07/2019
27/07/2019
மௌனமாய்ப் பயணிப்போம் நூலக ஆலயங்களில்
ஆண்ட்ராய்டும் ஆப்பிளும்
ஆதிக்கம் செலுத்தாமல்
கூகிளும் வாட்சப்பும்
கோலாச்சி நிற்காமல்
தொலைக்காட்சி ஊடகங்கள்
தொந்தரவு புரியாமல்
கைப்பேசி அழைப்புகள்
கழுத்தறுப்பு செய்யாமல்
சில நேரம்
சில நேரம் மட்டும்...
சில நேரமாவது...
......
......
மௌனமாய்ப் பயணிப்போம்
நூலக ஆலயங்களில்
✍️செ.இராசா
(பிள்ளைகளுடன் காரைக்குடி கிளை நூலகத்தில்....)
(பிள்ளைகளுடன் காரைக்குடி கிளை நூலகத்தில்....)
Subscribe to:
Posts (Atom)







