#நேர்_கொண்ட_பார்வையில்
நீ செல்லும் போது
யார் எங்கு சென்றாலும்
நீ செல்ல வேண்டாம்! ஊர் போகும் பாதையில் ஊறுள்ள போது யார் எங்கு போனாலும் நீ போக வேண்டாம்!
பார் பேசும் வார்த்தையில் பழுதுள்ள போது யார் என்ன சொன்னாலும் நீ கேட்க வேண்டாம்!
வா என்று சபலங்கள் வரவேற்கும் போதும் நோ என்று வெட்டிவிட நீ தயங்க வேண்டாம்!
✍️செ. இராசா
(அப்புறம் படம் நல்லா இருக்கு...உண்மையிலேயே அஜீத் நல்லா
நடிச்சிருக்காப்ல. இவரு மாதிரி ஒரு பெரிய கதாநாயகர் இந்த மாதிரி கருத்துள்ள
படத்தில் நடிப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று.👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽)
அட்றா அட்றா அட்றா! அட்றா தம்பி அட்றா! தொட்றா தொட்றா தொட்றா! தொட்றா தம்பி தொட்றா! போற்றும் உலகம் போற்றட்டும்! தூற்றும் உலகம் தூற்றட்டும்! பற்றிக் கொண்டுத் திரியாதே! தொற்றிக் கொண்டுத் துவளாதே! (அட்றா....)