கவிச்சரத்தலைமை வணக்கம் ***************************** அழகுத் தமிழாலே அற்புதக் கவி படைக்கும் ஆற்றல் கவிதாயினி பரிமளா தேவி அம்மாவை பாசத்தோடு வணங்குகின்றேன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்ப்பட்டறை அவை வணக்கம் ******************************** வருங்காலக் கவியரசரும் வருங்காலக் கவிக்கோவும் உருவாகும் தளமாக உருவாக்கும் தளமாக இருக்கின்றப் பட்டறையை இதயத்தில் வாழ்த்துகின்றேன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குற்றங்கள் ********** குற்றங்கள் நாட்டில் பெருகுது என்றால் சட்டங்கள் நாட்டில் தூங்குது என்பர்! குற்றத்தின் காரணம் யாதெனக் கண்டே சட்டத்தால் குற்றத்தை களைவது நன்றே!
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
தண்டனை *********** தீதும் நன்றும் பிறர்தர வாரா யாதும் இங்கே வருவது நம்மால் என்றே உணர்ந்து நன்றே செய்ய துன்பம் நீங்கி இன்பம் கூடும்!
இதனை உணராச் சிலரின் செய்கை இடரைத் தந்து வலியைத் தந்தால் குற்றப் பிரிவின் தன்மைக் கேற்ப சட்டப் பிடியில் கடுமை வேண்டும்!
காலம் தாழ்த்தும் நீதியின் செயலும் கடுமை இல்லாத் தண்டனை முறையும் குற்றம் வருவதைத் தடுக்கா விடுத்து குற்றம் பெருகிட வழிவகை செய்யும்!
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
நன்றி நவில்தல் ************** அறிஞர்கள் அவையிலே கவிஞர்கள் சபையிலே எனக்கும் வாய்ப்பளித்த எழில்மிகுப் பட்டறையை மனமாலே மொழியாலே மகிழ்வோடு வணங்குகின்றேன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்
பழம் தரும் பாலா- வெறும்
பழம் தரும் ஆளா?!-இல்லை
பழம் நிறைய தந்தே- எங்கள்
பலம் சேர்க்கும் தோழா! பழச்சாறு கேட்டால்- இவர் பக்குவமாய்த் தருவார்- தினம் மலைக்காது நின்றே- இவர் சளைக்காமல் உழைப்பார்!
இனிப்பேதும் தந்தே- எங்கள் இதயத்தில் நிற்பார்- இது தமிழீழ மண்ணின்- நல்ல தமிழறம் என்பார்...............!!!
வாழ்க வளமுடன்.....பாலா அண்ணா Jeya Balan
(எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் பழம் தருவார்கள் மற்றைய
நாட்களில் எலுமிச்சை பழச்சாறு தருவார்கள். அவர்களுக்கு என் பழமார்ந்த
நன்றி.....)
அலைவீசும் கரை மீது
அலைகின்ற விழியோடு
வலைவீசும் வாலிபனே.......- உயிர்
சிலைதேடும் விழி மாற்றி- நல்
கலைதேடும் கண்கொண்டால்- நீ மலைபோலே உயர்ந்திடுவாய்- உன் நிலைமாறக் கண்டிடுவாய்.,,,