யாரைக் குறையென்பேன் சகியே
யாவிலும் குறைகளுண்டோ?!
ஊரேக் குறையென்றால் சகியே
ஊரிலே நாமுமுண்டோ?!!
காலம் கடக்குதடி சகியே
காரணம் புரியலையோ?
ஞாலம் சுழலுதடி சகியே
நாட்களும் நகருதன்றோ?!
நேற்று முடிந்ததடி சகியே
நேர்ந்தது பிறக்குதன்றோ?
மாற்றம் வருகுதடி சகியே
மாறிட வருவாயோ.....

No comments:
Post a Comment