26/01/2025

வேங்கைவயல் சம்பவத்தில்

 


வேங்கைவயல் சம்பவத்தில்
......நீதிகண்ட பின்னரும்
போங்குயென்று சொல்லுகின்ற
......போக்குயென்ன நியாயமோ?
தீங்குசெய்த மாக்களெல்லாம்
......சேர்ந்துசெய்த செய்கையை
தாங்குகின்ற நாலுபேரின்
.....தன்மையென்ன தன்மையோ?

வாகுவான வாய்ப்பிருந்தும்
......மாறிடாத யாருமே
சாகுமாறு வந்தபோதும்
......தாழ்வதில்லை என்றுமே!
பாகுபாடு தீதுயென்று
.....பாயுமந்தச் சட்டமே
பாகுபாடு கொண்டதென்றால்
......பாவமிங்கே யாவுமே!

✍️செ. இராசா

No comments: