24/01/2025

தமிழை வெறுத்தத் தலைவனை

 


தமிழை வெறுத்தத் தலைவனை
....தந்தை யாக்கி மகிழ்வதும்
அமிலம் உமிழ்ந்த சொற்களை
....அர்த்தம் மாற்றி உரைப்பதும்
நிமிர்ந்து பேசும் எவரையும்
....விரைந்து சென்று தடுப்பதும்
தமிழன் மேலே வருவதை
.... தவிர்க்கும் சூழ்ச்சி புரியுதா?!

வள்ளுவன் வாழ்ந்த மண்ணிலே
....வந்த வரெல்லாம் ஆள்வதா?!
கொள்ளையர் வாழ எண்ணியே
....கொள்கையில் மாற்றம் வருகுதா?
பள்ளியை அரசு மூடியே
....பானமாய் விற்று செழிக்குதா?!
துள்ளிடும் காளையர் கிறங்கவே
.... சூட்சும வஸ்து கிடைக்குதா?

✍️செ. இராசா

No comments: