#மெட்டுக்கு_எழுதிய_பாடல்
அல்லா தந்த அற்புத மார்க்கம் வந்துவிட்டால்- நீர்
எல்லாநலனும் இங்கேக் கிடைக்கக் கண்டிடலாம்....(2)
எங்கும் யாவும் படைத்தோனே
எம்மைக் கரையேற்று(ம்) ரஹ்மானே (2)
அல்லா தந்த அற்புத மார்க்கம் வந்துவிட்டால்- நீர்
எல்லாநலனும் இங்கேக் கிடைக்கக் கண்டிடலாம்....
வேதம் நபியை அடைந்திடவே
விருப்பமும் கொண்டாய் -அவர்
வழியினாலே உலகமுய்யும்
மார்க்கத்தைக் கொடுத்தாய்..
வாழும் போதே ஏற்றிடாத
மாந்தரும் கண்டாய்..
கால நேரம் ஏற்க வைக்கும்
கணிப்பையும் தந்தாய்...
ஏழ்மையை எண்ணிட
ஈகையைப் போற்றிட வைத்தவனே
எங்கள்
நேர்மையைக் காத்திட
நேசத்தைக் காட்டிட அருள்வோனே
எங்கும் யாவும் படைத்தோனே
எம்மை கரையேற்று(ம்) ரஹ்மானே (2)
அல்லா தந்த அற்புத மார்க்கம் வந்துவிட்டால்- நீர்
எல்லாநலனும் இங்கேக் கிடைக்கக் கண்டிடலாம்..செ. இராசா
No comments:
Post a Comment