29/01/2025

யாரைக் குறையென்பேன் சகியே

 


யாரைக் குறையென்பேன் சகியே
யாவிலும் குறைகளுண்டோ?!
ஊரேக் குறையென்றால் சகியே
ஊரிலே நாமுமுண்டோ?!!
இன்று விளைவதெல்லாம் சகியே
என்றோ விதைத்ததன்றோ?
நன்மை விளைவதெல்லாம் சகியே
நம்வினை விளைவன்றோ?
காலம் கடக்குதடி சகியே
காரணம் புரியலையோ?
ஞாலம் சுழலுதடி சகியே
நாட்களும் நகருதன்றோ?!
நேற்று முடிந்ததடி சகியே
நேர்ந்தது பிறக்குதன்றோ?
மாற்றம் வருகுதடி சகியே
மாறிட வருவாயோ.....
✍️செ. இராசா

26/01/2025

வேங்கைவயல் சம்பவத்தில்

 


வேங்கைவயல் சம்பவத்தில்
......நீதிகண்ட பின்னரும்
போங்குயென்று சொல்லுகின்ற
......போக்குயென்ன நியாயமோ?
தீங்குசெய்த மாக்களெல்லாம்
......சேர்ந்துசெய்த செய்கையை
தாங்குகின்ற நாலுபேரின்
.....தன்மையென்ன தன்மையோ?

வாகுவான வாய்ப்பிருந்தும்
......மாறிடாத யாருமே
சாகுமாறு வந்தபோதும்
......தாழ்வதில்லை என்றுமே!
பாகுபாடு தீதுயென்று
.....பாயுமந்தச் சட்டமே
பாகுபாடு கொண்டதென்றால்
......பாவமிங்கே யாவுமே!

✍️செ. இராசா

கோவென எண்ணியே


கோவென எண்ணியே
.....கொக்கரிக்கும் கூட்டத்தைப்
போவென சொல்லும்நாள்
.....போவரோ?!- ஓவென்பார்
ஆடாத ஆட்டமெல்லாம்
.......ஆடியபின் ஆட்டத்தின்
ஈடாகக் கிட்டும்
.......இடம் 

நல்வாழ்த்து!

 

எல்லோர்க்கும் எல்லாமும் எப்போதும் ஒன்றெனவே
நல்லபடி கிட்டநல் வாழ்த்து!

25/01/2025

சீச்சீ யாருஇவ சீ

 

(திடீரென்று புகழ்பெற்ற ஒரியா மொழிப் பாடல் மெட்டுக்கு நான் தமிழில் எழுதியது. இதேபோல் நம் பாட்டும் என்றாவது ஒருநாள் புகழ் பெறாமலாப் போய்விடும் என்கிற தன்னம்பிக்கையை ஊட்டிய பாடல்)

சீச்சீ யாருஇவ சீ
சீச்சீ யாருஇவ தேவை யில்லை சீ

சொந்தபந்தத்துல பொண்ணு கிடைக்கல இவளை கட்டிக்கிட்டேன்.. (2)
நெஞ்சாங்கூட்டுல தேவதை போலவே இவளை வச்சிருந்தேன்...
வர வர பின்னே சரியில்லைன்னாக்க
என்னத்த செய்ய இனி- என்
அன்பை உதறிப் போனபின்னே
என்னத்த சொல்ல இனி
சீச்சீ சீசீ
சீச்சீ யாருஇவ சீ
சீச்சீ யாருஇவ தேவை யில்லை சீ

எள்ளுனு சொன்னாக்க
எண்ணைய்யா மாறியே
என்னையத் தந்திடுவேன்..
என்னங்க என்றாக்க
என்னன்னு கேட்காம
முன்னால வந்திடுவேன்...

என்னஇப்படி பொம்பள பின்னே
திறியிறான் இவன்சொல்?
ஏன்தான்இப்படி பொம்பளே பின்னே
மயங்குறான் இவன் சொல்?
இப்படியெல்லாம் ஊருக்குள்ள எத்தனை எத்தனை பேச்சு....
ஆனால் நானும் கேட்கலையே
அதுவே பலிச்சு போச்சு...
சீச்சீ சீசீ
சீச்சீ யாருஇவ சீ
சீச்சீ யாருஇவ தேவை யில்லை சீ

✍️செ. இராசா 

24/01/2025

தமிழை வெறுத்தத் தலைவனை

 


தமிழை வெறுத்தத் தலைவனை
....தந்தை யாக்கி மகிழ்வதும்
அமிலம் உமிழ்ந்த சொற்களை
....அர்த்தம் மாற்றி உரைப்பதும்
நிமிர்ந்து பேசும் எவரையும்
....விரைந்து சென்று தடுப்பதும்
தமிழன் மேலே வருவதை
.... தவிர்க்கும் சூழ்ச்சி புரியுதா?!

வள்ளுவன் வாழ்ந்த மண்ணிலே
....வந்த வரெல்லாம் ஆள்வதா?!
கொள்ளையர் வாழ எண்ணியே
....கொள்கையில் மாற்றம் வருகுதா?
பள்ளியை அரசு மூடியே
....பானமாய் விற்று செழிக்குதா?!
துள்ளிடும் காளையர் கிறங்கவே
.... சூட்சும வஸ்து கிடைக்குதா?

✍️செ. இராசா

அல்லா தந்த அற்புத மார்க்கம்

 


#மெட்டுக்கு_எழுதிய_பாடல்

அல்லா தந்த அற்புத மார்க்கம் வந்துவிட்டால்- நீர்
எல்லாநலனும் இங்கேக் கிடைக்கக் கண்டிடலாம்....(2)
எங்கும் யாவும் படைத்தோனே
எம்மைக் கரையேற்று(ம்) ரஹ்மானே (2)
அல்லா தந்த அற்புத மார்க்கம் வந்துவிட்டால்- நீர்
எல்லாநலனும் இங்கேக் கிடைக்கக் கண்டிடலாம்....

வேதம் நபியை அடைந்திடவே
விருப்பமும் கொண்டாய் -அவர்
வழியினாலே உலகமுய்யும்
மார்க்கத்தைக் கொடுத்தாய்..
வாழும் போதே ஏற்றிடாத
மாந்தரும் கண்டாய்..
கால நேரம் ஏற்க வைக்கும்
கணிப்பையும் தந்தாய்...

ஏழ்மையை எண்ணிட
ஈகையைப் போற்றிட வைத்தவனே
எங்கள்
நேர்மையைக் காத்திட
நேசத்தைக் காட்டிட அருள்வோனே

எங்கும் யாவும் படைத்தோனே
எம்மை கரையேற்று(ம்) ரஹ்மானே (2)
அல்லா தந்த அற்புத மார்க்கம் வந்துவிட்டால்- நீர்
எல்லாநலனும் இங்கேக் கிடைக்கக் கண்டிடலாம்..

✍️செ. இராசா

21/01/2025

எதிர்பார்ப்பே இல்லாமல்

 


எதிர்பார்ப்பே இல்லாமல்
....எப்போதும் வாழத்தான்
.........எல்லோரும் சொல்லுகின்றார்!
எதிர்பாரா சங்கடங்கள்
.....எப்போதும் வந்ததெனில்
..........என்னவென சொல்லவருவார்?
அதிகாரம் வந்தவுடன்
....அத்தனையும் மாறுமென
........ஆதரவாய்ப் பேசிவருவார்!
அதி-காரம் கொண்டவராய்
.... ஆட்சிக்கு வந்தவுடன்
.........ஆவதில்லை என்றுவருவார்!
✍️செ. இராசா

படித்த உடன்வரும் பாட்டு



அசையா பொருளுள்
....அசையும் அணுபோல்
அசைகள் இரண்டும்
.. அமைக்கும்- இசைவால்
அடிசீர் தொடரும்
....அழகுத் தொடையால்
படித்த உடன்வரும்
.....பாட்டு 

20/01/2025

மெட்டு: உச்சி வகுந்தெடுத்து----(பாலியல் வன்முறைக்கு எதிரான ஓர் பாடல்)

No photo description available.
(பாலியல் வன்முறைக்கு எதிரான ஓர் பாடல்....அரசு சார்பான நிகழ்வு என்பதால் அதையும் நினைவுகூர்ந்து எழுதப்பட்டது)
பெத்து வளர்த்தெடுக்க
பட்டது கொஞ்சமில்ல
நாலெழுத்துப் படிக்கவச்சா நல்லதுன்னு சொன்னாக
நல்லதுன்னு நினைச்சதிப்போத்
தப்பாகப் போயிடுச்சோ....(2)
ஆரீராரோ ஆரீராரோ ....
ஆரீராரோஆரீராரோ ஆரீராரோ...
கண்ணுல எண்ணை ஊத்தி
கவனமாகப் பார்த்தாலும்
காவாலிக் கூட்டிமிங்கே திரியுதுங்க...
பெத்தவங்க நெஞ்சமெல்லாம் பதறுதுங்க..
அடப் பொட்டப் புள்ள நிம்மதியா வரணுமுங்க...
பெத்து வளர்த்தெடுக்க
பட்டது கொஞ்சமில்ல
நாலெழுத்துப் படிக்கவச்சா நல்லதுன்னு சொன்னாக...
கெட்டப் பயலுகளைக் கேக்காம விட்டாக்க
பிள்ளைங்க படிப்பதெப்போ சொல்லுங்க
தட்டுக்கெட்ட இவனுகளை தட்டிக்கேட்க
அட நம்மவிட்டா யாருஇங்கே நியாயங்கேட்க
பெண்களுக்கு பாதுகாப்பு
உள்ளயிடம் தமிழ்நாடு
அப்படித்தான் எல்லோருமே சொன்னாங்க
சொன்னவுக சொன்னதுபோல் காப்பாத்த
அட ஒற்றுமையா கைகோர்த்து நிப்போங்க...


பனை மட்டைப் பசங்களடா

 

பனை மட்டைப் பசங்களடா
பாக்க சொல்ல குழந்தைங்கடா
நடிக்க சொல்ல வந்து நின்னா தெறிக்குன்டா
சண்டை கிண்டை போடமாட்டோம்
கண்ட தேதும் பேச மாட்டோம்
ராஜா அண்ணன் டேக்கு சொன்னா
பறப்போன்டா...(2)
இதுதாங்க பனமட்ட கூட்டம் - இவுங்க
வந்தாலே மறப்பீங்க கஷ்டம் (2)
மீசக்காரங்க வரைஞ்ச மீசைக்காரங்க
மாசப் பாருங்க எங்க மாசப் பாருங்க (2)
வாரி வாரி வழங்குறாரு
வாழும்போதே உதவுறாரு
ராஜா அண்ணன் மனசப்பாருங்க
ஜல்லிக்கட்டுக் காளைபோல
துள்ளிக்கிட்டுப் போக நாங்கக்
காரணமே அவருதானுங்க...(2)
நாலு காசு வருகுதுன்னு
கவர்ச்சி காட்டும் கூட்டமுண்டு
தர்ம வழியில் நடக்கனுன்னு
நம்மச் சேனல் கொள்கையுண்டு...(2)
அன்பால இணைஞ்சோங்க ஒன்னா அன்று...
அதனால ஜெயிச்சோங்க தனியா இன்று...(2)
எல்லோர்க்கும் பொதுவான சேனல்- நம்போல்
எளியோர்க்கும் இருக்காதோ தேடல் (2)
மீசக்காரங்க வரைஞ்ச மீசைக்காரங்க
மாசப் பாருங்க எங்க மாசப் பாருங்க (2)
(தன்னன்ன தனனா....)
ஏறு ஏறு ஏறுமுகம்
லைக்சு வந்தால் மாறும் முகம்
மக்கள் மனசு தங்கம் தானுங்க
காலம் நேரம் மாறிவிடும்
சொந்த பந்தம் நோகடிக்கும்
எங்கள் சேனல் கவலை விரட்டுங்க (2)
தொல்லை கொடுக்கும் உலகமுங்க
நாளும் கடந்து போகனுங்க
அதுக்கு சிரிக்க வேணுமுங்க
நாங்க இருக்கோம் பார்த்துக்குங்க...
பனமட்ட என்றாலே கலக்கலுங்க
உங்கள்
ஆதரவு இருந்தாலே போதுமுங்க...(2)
எல்லோர்க்கும் பொதுவான சேனல்- நம்போல்
எளியோர்க்கும் இருக்காதோ தேடல் (2)
மீசக்காரங்க வரைஞ்ச மீசைக்காரங்க
மாசப் பாருங்க எங்க மாசப் பாருங்க (2)
பனை மட்டைப் பசங்களடா
பாக்க சொல்ல குழந்தைங்கடா
நடிக்க சொல்ல வந்து நின்னா தெறிக்குன்டா
சண்டை கிண்டை போடமாட்டோம்
கண்ட தேதும் பேச மாட்டோம்
ராஜா அண்ணன் டேக்கு சொன்னா
பறப்போன்டா...(2)
.........,..........

15/01/2025

பொங்கல் பாடல் - எங்களோட வீரம்


எங்களோட வீரம்
எல்லை மீறிப் பாயும்
ஆனா நாங்க பொறுமை காக்கும் கூட்டம்
வெட்டருவா மீசை
மாமன்கூட பேச
எங்கவூரு பொண்ணுக்கெல்லாம் ஆசை
ஏ மிய்யா மிய்யா மிய்யா மிய்யா பூனை...
மண்ணுல புதைஞ்சிருக்குது சங்ககாலப் பானை..
ஏ நீயும் நானும் நானும் நீயும் ஒன்னா
அந்தப் பானையில பொங்கல வைப்போம் ஃபன்னா....
விடியற்காலை பொங்கல் வைப்போம்
விடியல் தந்த ஒளியை மதிப்போம்
சொந்தம் பந்தம் எல்லாம் இணைஞ்சு
படையல் போட்டா இனிக்கும் விருந்து
(2)
ஒருநாள் வீட்டுக்கு மறுநாள் மாட்டுக்கு
படையல் போடும்
பொங்கல் திருநாள்
இயற்கை இறைவன் எதுவோ அதுக்கு
நன்றி சொல்லும் அன்புப் பெருநாள்
தரணி ஆண்ட தமிழர் திருநாள்
சங்ககாலம் தொட்டு
எங்ககாலம் வரைக்கும்
எல்லோருமே கொண்டாடுவோம் பொங்கல்
ஏலேலோ....
ஜல்லிக்கட்டு காளை
துள்ளுவதைப் போல
சந்தோசமாக் கொண்டாடுவோம் பொங்கல்