16/05/2024

நீயே என் பிரபஞ்சமடா...

 

நீ
கண்சிமிட்டும் போதெல்லாம்
எம் இதய வானிலே இடி மின்னல்...

நீ
புன்னகைக்கும் போதெல்லாம்
எம் உயிரை வருடும் இளந்தென்றல்..

நீ
உதடுகடிக்கும் போதெல்லாம்
என் உடலை நனைக்கும் மழைத்தூறல்..

நீ
மீசை தடவும் போதல்லாம்
என் ஆசை நதியில் பெருவெள்ளம்..

நீ
நெருங்கி வரும் போதெல்லாம்
நான் உன்னில் கரையும் ஓர் துளி..

ஆம்..
நீ...
நீ..
நீயே என் பிரபஞ்சமடா...

✍️செ. இராசா

(இன்று இணையத்தில் ஓர் தலைப்பு பார்த்தேன். அந்தத் தலைப்பு #நீயே_என்_உலகமடா...அத்தலைப்பை சற்றே மாற்றி எழுதியுள்ளேன்)

No comments: