04/05/2024

இயலாயென இசையாயென

இயலாயென இசையாயென
......இடையேசிலர் கிளம்ப
புயலாகவே அனலாகவே
......புனைந்தார்பலர் கதையே
இயல்பாகவே ஒலிதோன்றியே
......மொழிதோன்றிய தறிந்தும்
நயமாகவே அதைமாற்றியே
.....நவில்ந்தார்இயல் முதலே!

பலகாலமாய் பலபேர்களால்
...பதிவாகிய கவிகள்
நிலையாகிட ஒருகாரணம்
...நிசமாகவே அசையே..
சிலபேர்களின் மதியாளுமை
...சிறிதாகிட கவியின்
நிலைமாற்றியே புதிதாக்கிய
...வினையால்வரும் விளைவே...!

அசை;ஈரசை அதில்;ஓரிசை
...அதுதானிசைக் கவியே..
அசைமாற்றியே அசைமாற்றியே
...அமைத்தாரதை முறையே..
இசையாகவே இயல்பாகவே
...எடுத்தாண்டதன் வழியே
திசையாவிலும் தமிழா;தமிழ்
..சிறந்தோங்கிடும் மொழியே!

✍️செ.இராசா

No comments: