28/05/2024

பிறந்தநாள் பாட்டு (பொதுவான பாடல்)


பேரின்ப வாழ்வே வாழ்க
பேரின்ப வாழ்வே வாழ்க

பூமிக்கு வந்த நாள்..
.....பூமிக்கு வந்த நாள்!
புத்தாடை ஏதுமின்றி
.... பூமிக்கு வந்தநாள்!
ஈரைந்து மாதங்களாய்
.... ஈரத்தில் மூழ்கியே
பாரினைக் காணவேண்டி
....பாய்ந்தோடி வந்தநாள்

கண்ணே மணியே சிட்டே
ஏ பட்டே...என் செல்லம்
அழகே அமுதே அன்பே
ஏ..அறிவே..என் சாமி
உலலலலலலலா...ங்கு
உலலலலலலலா...ங்கு
என் செல்லம் செல்லம் செல்லம்
என் சாமி சாமி சாமி

சாதிக்க வந்த நாள்
....சாதிக்க வந்த நாள்
தாய்தந்தை மூலமாக
...சாதித்தே வந்த நாள்
வையகம் பேரைச்சொல்ல
...வாழ்வதே வாழ்க்கையென
மெய்யெனும் ஞானம்பெற
...வாழ்த்துவோம் வாங்களேன்..

பேரின்ப வாழ்வே வாழ்க
பேரின்ப வாழ்வே வாழ்க

புதிய உலகைக் காண -நீ
புவியில் உதித்த நாளே..
ஒளிரும் உலகைக் காண- நீ
வெளியில் குதித்த நாளே..

இதயம் இரண்டும் மகிழ- உன்
உதயம் நிகழ்ந்த நாளே...
இன்பம் எங்கும் பெருக- நீ
இறங்கி வந்த நாளே...

இனிய பிறந்தநாளே - இது
இனிய பிறந்தநாளே
இனிமை மிகுந்த நாளே- இது
இறைவன் கொடுத்த நாளே...

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நீ
நீண்ட காலம் வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நீ
நீண்ட காலம் வாழ்க

ஆலம் விழுது போலே- நீ
ஆழம் ஊன்ற வாழ்க
ஞான வேதம் போலே-நீ
ஞாலம் ஆள வாழ்க

அன்பும் அறமும் சேர்ந்த- நற்
பண்பைப் போற்றி வாழ்க
தன்மை மேலும் உயர-நம்
தமிழைப் போற்றி வாழ்க

✍️செ. இராசா

No comments: