13/05/2024

எழுதாத கவிதைகளை எழுத வேண்டும்

 

எழுதாத கவிதைகளை எழுத வேண்டும்!
.....எழுதும்முன் மனதையது வருட வேண்டும்!
அழுகாத வருங்காலம் தோன்ற வேண்டும்!
.....அழுகும்முன் வருங்கவலைத் தீர வேண்டும்!
நழுவாத உறவுகளை நாட வேண்டும்!
.....நழுவும்முன் நகர்ந்துவிட எண்ண வேண்டும்!
முழுவாதத் திறன்பெருக பயில வேண்டும்!
...முழுவாழ்க்கை முடியும்முன் வாழ வேண்டும்!
 
✍️செ. இராசா

No comments: