பல்லவி
சிக்கலில்லா மனுஷன் இங்கே யாருங்க- சிக்கல்
சிக்கலுனு புலம்புறத நிறுத்துங்க...
சிக்கலில சிரிக்கக் கொஞ்சம் பழகுங்க- சிக்கல்
சீக்கிரமே ஓடுறதப் பாருங்க...
ஒன்னும் ஒன்னும் இரண்டு- அட
வந்து போகும் டிரெண்டு
ஒன்னு போனா ஒன்னு -இதுக்கு
எண்டே இல்லை எண்ணு!
சரணம்
எண்ணம் போல வாழ்க்கையின்னு ஏன் சொன்னாங்க?.
எண்ணம் என்ன செய்யுமுன்னு கண்டுகொண்டாங்க..
ஆசையத்தான் சீரமைக்க ஏன் சொன்னாங்க?
முறையில்லாத ஆசையால தீங்கு வருதுங்க...
கோபப்பட வேணாமுன்னு ஏன் சொன்னாங்க?
உறவு கெட்டுப் போகுமுன்னு உதறச்சொன்னாங்க...
கவலையொழிக்க வேணுமுன்னு ஏன் சொன்னாங்க?
உடல உயிர பறிக்குமுன்னு களையப் சொன்னாங்க...
நான் யாரு
நான் யாரு
நான் யாருன்னு
நமக்கு உள்ளே போகச்சொன்னாங்க....போயி
உண்மையென்ன உணரச் சொன்னாங்க...
No comments:
Post a Comment