வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
எமனுக் கருளிய புண்ணிய தளமே ஸ்ரீ வாஞ்சியம்
அவரவர் வினைகளை அகற்றிட வாரும் ஸ்ரீ வாஞ்சியம்
திருமகள் ஊடலை வாஞ்சையாய் மாற்றிய ஸ்ரீ வாஞ்சியம்
பிரிந்தவர் வாழ்வினில் சேர்ந்திட வைக்கும் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
#வேறு
இருவினை களையும்
திருவினை புரியும்
.........ஈசனே நமசிவாய
இருமனம் இணையும்
திருவருள் வழங்கும்
.........நேசனே நமசிவாய
ஓம் ஓம் நமசிவாய
ஸ்ரீ வாஞ்சிய நமசிவாய
ஓம் ஓம் நமசிவாய
ஸ்ரீ வாஞ்சிய நமசிவாய
(2)
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
#வேறு
அண்டம் பிண்டமாய்
அங்கும் இங்குமாய்
எங்கெங்கும் நிறைந்தாய் பரமேஸ்வரா.
அன்றும் இன்றுமாய்
இன்றும் என்றுமாய்
என்றென்றும் இருப்பாய் லிங்கேஸ்வரா...
அங்கம் தங்கமாய்
மின்னும் வைரமாய்
எங்கெங்கும் ஜொலிப்பாய் மகாதேவா
சொந்த பந்தமாய்
அந்தம் ஆதியாய்
என்றைக்கும் வருவாய் தயாபரா
பற்றித் தாவிட பற்றித் தாவிட
பற்றை கூட்டிடும் பற்றில் விடுபடப்
பற்றிடும் தெய்வமே வாஞ்சிநாதா...
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
#வேறு
(ஒவ்வொரு வரி முடிவிலும் வேண்டுமெனில் ஸ்ரீ வாஞ்சியம் சேர்க்கலாம்)
அணுமுதல் அண்டமாய் ஆனவன் நீயே!
சிணுங்கிடும் பிஞ்சிலே தேனுமிழ் நீயே!
கதிரவன் தீயிலே காண்பவன் நீயே!
மதியிலே மார்க்கமாய் வந்தவன் நீயே!
அருவமாய் ஆகிய ஆதியும் நீயே!
இருவினை நீக்கிடும் பரம்பொருள் நீயே!
மங்கள நாயகி மன்னவன் நீயே!
காசியை விஞ்சிடும் அற்புதம் நீயே!
நாதா வாஞ்சி நாதா
நாதா வாஞ்சி நாதா
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்
வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சியம்

No comments:
Post a Comment