31/07/2025

அவன் யார்?

 


மறக்க முடியவில்லை
அந்தக் காட்சியை...

ஒல்லியான தேகம்
உடைந்துபோன முகம்
சோகம் நிறைந்த கண்கள்
சொல்லமுடியா வலியென
அந்தத் தேநீர் கடையில்
என்னருகே அமர்ந்திருந்தான்...

புரோட்டாவைப் பிச்சு
தேநீரில் நனைத்தவாறே
ஒவ்வொரு துண்டாய்
உள்ளே போட்டான்....

அந்நேரம் அவன் பசி
கொஞ்சம் கொஞ்சமாய்
விடுதலை பெற்றாலும்
அவன் மட்டும்
அப்படியே அமர்ந்திருந்தான்...
எதையோ நினைந்தவாறே...

அவன் யார்?
யாராய் இருந்தால் என்ன?
அவனொன்றும் சொல்ல வேண்டாம்..
நானறிவேன்...

No comments: