பாடுபொருள் இல்லாமல் பாடுகிற காலத்தில்
....பாவலனுக் கென்ன வேலை?!
காடுவயல் எல்லாமும் காய்கின்ற நேரத்தில்
....காவலனுக் கென்ன வேலை?!
தேடுகிற அப்போதே தேடியது கிட்டுமெனில்
...தெய்வமதெற் கென்ன வேலை?
நாடுகிற அத்தனையும் வாய்ப்புவரம் ஆகுமெனில்
...நாளையதெற் கென்ன வேலை?!
No comments:
Post a Comment