கிடைத்த இடம்: இரண்டாமிடம்
நடுவர்_________:திரைப்படப்
அமைப்பு_______: தமிழ்ப்பட்டறை
(8 இலக்கியப் பேரவைகள் உள்ளது)
தலைவர்_______: திரு. சேக்கிழார் ஐயா
புனித ரமலான்
**************
இனிய இசுலாம் மார்க்கத்திலே
புனித ரமலான் மாதத்திலே
நோன்பு நோற்கும் அனைவருமே
என்றும் ஆண்டவர் பிள்ளைகளே
அல்லா அருளியத் திருமறையை
எல்லா மனிதரும் அறிந்தாலே
பொல்லாத் துயரங்கள் எல்லாமே
இல்லா தென்றே ஓடிடுமே...
முகமது நபிகள் சொல்லியதை
அகமதில் நிறுத்தி நடந்துகொள்ள
சகமது அளவின் துயர்கூட
நகமது அளவாய் மாறிடுமே...
மக்கா நோக்கியத் தொழுகையினை
எக்கா லத்திலும் தவறாதோர்
எல்லா வளமும் பெற்றிடவே
எல்லாம் வல்லோன் அருள்வானே....
அன்பே சிவமென அறிந்தோரே
அன்பே இயேசுவாய்ப் புரிந்தோரே
அன்பே அகிலமாய்க் காண்போரே
அல்லா உறவென்று நாமறிவோம்!
பிற்சேர்க்கை:
எனது குரலில்
https://youtu.be/

No comments:
Post a Comment