விதியென்று சொல்லலாமா?!!
தூவுகின்ற வித்தெல்லாம்
 துளிர்விட்டு எழுவதில்லை
 
 விழுகின்ற விதையெல்லாம்
 விருட்சமாய் வருவதில்லை
 
 மழைமேக நீரெல்லாம்
 முத்தாய்ப் பிறப்பதில்லை
 
 படைக்கின்ற படைப்பெல்லாம்
 படியேற முடிவதில்லை
 
 வீரியங்கள் மிகுந்தாலும்
 விரையமாய்ப் போவதை 
 விதியென்று சொல்லலாமா?!! 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment