(குறும்பட சூழலுக்காக எழுதியது)
#சோகம்
இதுதான் காதலா? இல்லை
இதுவும் காதலா?!!
வலிதான் மிச்சமா?! உயிர்ப்
பலிதான் உச்சமா?!
வயதுகள் கடந்தும் மறந்திட வில்லை
நியதிகள் தடுத்தும் முடிந்திட வில்லை
முடிந்ததைத் தொடர்ந்தோம் முறையது இல்லை
விடிந்திடும் முன்னே நாங்களும் இல்லை....
#நகைச்சுவை கலந்த உணர்வோடு
ஆசை வந்திடுச்சி ஆசை வந்திடுச்சி
மீசையெல்லாம் நரைச்சபோதும் ஆசை வந்திடுச்சி...
டையடிச்சிப் பார்க்குதுங்க பெருசுங்க
கையக்கோர்த்து நடக்குறதப் பாருங்க
விசிலடிச்சு ரகளைபண்ணி ஆடுது
ரீல்சுபண்ணும் ஆப்பு எங்கே தேடுது
ஐசுகிரீமு போல மனசு உருகுது
சேர்த்து வச்ச பாரமெல்லாம் கரையுது
விடலைப்புள்ள கூடயிப்ப வியக்குது
கடலைபோட்ட காலமிப்போ திரும்புது
போடு
போடு தில்லாலே
போடு தில்லாலே
ஆடு முன்னாலே வந்து
ஆடு முன்னாலே...
செ. இராசா

No comments:
Post a Comment