ஒவ்வொரு மூச்சிலும்
....உட்புகும் காற்றினுள்
....உலவிடும் எண்ணம் யாவும்;
ஒவ்வொரு அணுவிலும்
......உயிரிலும் உணர்விலும்
.....உறைந்திட திண்ணம் ஆகும்!
செவ்விய எண்ணமும்
......செய்முறை வண்ணமும்
......தெய்வமாய் கூட நிற்கும்!
எவ்வழி எண்ணமோ
.....அவ்வழி நிச்சயம்
.....இனிவரும் காலம் மாறும்!
No comments:
Post a Comment