15/12/2025

ஒவ்வொரு மூச்சிலும்

 

ஒவ்வொரு மூச்சிலும்
....உட்புகும் காற்றினுள்
....உலவிடும் எண்ணம் யாவும்;

ஒவ்வொரு அணுவிலும்
......உயிரிலும் உணர்விலும்
.....உறைந்திட திண்ணம் ஆகும்!

செவ்விய எண்ணமும்
......செய்முறை வண்ணமும்
......தெய்வமாய் கூட நிற்கும்!

எவ்வழி எண்ணமோ
.....அவ்வழி நிச்சயம்
.....இனிவரும் காலம் மாறும்!

No comments: