ஒருவரே பேசினால் சொற்பொழிவு
இருவர் பேசினால் உரையாடல்
கலந்து பேசினால் கூட்டம்
பலரும் பேசினால் குழப்பம்
தானே பேசினால் பைத்தியம்
தன்னையே பேசினால் தம்பட்டம்
மாணவர்முன் பேசினால் வகுப்பு
வானொலிமுன் பேசினால் தொகுப்பு
உயர்த்திவிடப் பேசினால் போதனை
உயர்ந்தபின் பேசினால் சாதனை
கடவுளிடம் பேசினால் பிரார்த்தனை
கடமைக்காய்ப் பேசினால் வேதனை
உருகிஉருகிப் பேசினால் காதல்
உரக்க உரக்கப் பேசினால் மோதல்
இலக்கணமாய்ப் பேசினால் கவிதை
தலைக்கனமாய்ப் பேசினால் மமதை
காரியமாய்ப் பேசினால் சாமர்த்தியம்
காவியமாய்ப் பேசினால் தாம்பத்தியம்
ஆள்வதற்காகப் பேசினால் அரசியல்
மீள்வதற்காகப் பேசினால் ஆன்மீகம்
கவிநடையில் பேசினால் கவியரங்கம்
பொதுநடையில் பேசினால் பட்டிமன்றம்
நிந்தித்துப் பேசினால் நீதி மன்றம்
சிந்தித்துப் பேசினால் நம்ம மன்றம்!
*நம்ம - மனவளக்கலை மன்றம்
No comments:
Post a Comment