22/04/2024

பிறப்பிலே தாழ்ந்தவர் எவருமே இல்லை

 பிறப்பிலே தாழ்ந்தவர்
.....எவருமே இல்லை!
இறப்பினை வென்றவர்
.....இதுவரை இல்லை!
உறவினர் யாவரும்
.....உதவுதல் இல்லை
உறவுபோல் நட்புகள்
....உதறுவ தில்லை!

கடவுளைக் கண்டவர்
....கதைப்பதே இல்லை!
கடவுளை மறுப்பவர்
....கதைப்பது தொல்லை!
கடமையைச் செய்பவர்
....கலங்குவ தில்லை!
கடமையைத் தவிர்ப்பவர்
....கணக்கிடப் பிள்ளை!

✍️செ. இராசா

No comments: