30/04/2024

இலக்கு நோக்கிப் போகையில....

இலக்கு நோக்கிப் போகையில
இழப்பு ரொம்ப இருக்குது- ஆனால்
இறுதிவரைப் போகும் போதே
இறைவன் மகிமைப் புரியுது

கடனவுடன வாங்கி வாங்கி
வாழும் வாழ்க்கை எதுக்குங்க?
கடமைகள உதறி ஒதுங்கி
வாழ்ந்து என்ன இலாபங்க?

ஒரேவீட்டில் வாழும் போதும்
உறவில் எதுக்கு பிணக்குங்க?
ஒரேமண்ணில் வீழும் போது
வருவ தென்ன சொல்லுங்க?

✍️செ. இராசா

No comments: