தலைக்கவசம் அணிங்கன்னா...
தலைக்குப் பொருந்தலைன்னேன்
அப்ப வண்டிய யாரு ஓட்றதுன்னா..
அப்படினா நீயே ஓட்டுன்னேன்...
என்ற பொண்டாட்டியா
இந்த ஊர்ல ஓட்டுதுன்னு
சுயப்படம் எடுக்கலாம்னு
கைதூக்க நினைச்சா
விர்றுன்னு போனதுல
வேகமா வந்துட்டோங்க...
அட...
அடுத்தநாள் பாருங்க
அரசாங்க அறிவிப்பு...
இணைப்பாக் கூடவே
இருவரோட ஒளிப்படமும்...
ஆச்சரியம் போங்க..
அடையாளம் தெரியாத
அந்தப் படத்திற்கு
ஆயிரம் ரூபாயாம்...
அடக் கொடுமையே....

(சென்னை மாநகரில் பின்னாடி உள்ளவர்கள் தலைக்கவசம் போடலைன்னா 1000/-ரூ அபராத அறிவிப்பு சுடச்சுட உடனேயே வருகிறது உறவுகளே....ஜாக்கிரதை)
No comments:
Post a Comment