செந்தமிழ் கொஞ்சம் கவியே
உன் கோபம் அற்புத மொழியே
நற்றிணை யாவுன் விழியே
நர்த்தனம் ஆடுது தனியே
தாரகையே நீதான்டி
தாரமென வாயேன்டி
சம்மதத்த தாயேன்டி
சங்கதியச் சொல்லேன்டி
என் சொந்தமே...
சொந்தமே....நீதான்டி
அடிக்கடி அடிக்கடி அடிமனம்
துடிக்குது
எதுக்கடி எதுக்கடி இடியென அதிருது ஓஹோ..
அடி இதுதான் காதலா
உயிர் இரண்டின் மோதலா
வலி மிகுமே ஊடலால்
வழி வருதே கூடலால்
என் சொந்தமே... என் சொந்தமே கவியென வா
மேகதூதம் படிக்க
மேனியை நான் பார்த்திட வா
வெட்டும் மின்னல் ரசிக்க
கொஞ்சம் புன்னகை காட்டிட வா
ஏ மலரும் தேனை ருசிக்க
எந்த வண்டுக்கும்
சேதிகள் சொல்லிடுமா
சந்தோச தியானம் நடத்த
இது உன் தனிமலர் அல்லவா?
கன்னி மனதை பிடிக்க
ஏன் கதகளி ஏதும் பழகனுமா?
அன்பை அள்ளி விதைக்க
அட அனுபவம் அவசியமா?
ஓ...இதுதான் காதல் உணர்வா
என் உயிரும் கொதிக்குது கனலா
வா தனிக்கும் காதல் மழையாய்
வலம் வருவோம் கொஞ்சும் அலையாய்..செ. இராசா
No comments:
Post a Comment