புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
31/03/2025
நடக்காமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!
நடக்காமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!
..நடுவினிலே முயற்சியினைத் துறக்க வேண்டாம்!
படிக்காமல் ஒருநாளும் படுக்க வேண்டாம்!
...பணியதிகம் எனச்சொல்லி ஒதுங்க வேண்டாம்!
சடக்கென்றே சினம்கொண்டு சரிய வேண்டாம்!
...சமநிலையை ஒருபோதும் இழக்க வேண்டாம்!
கடுஞ்சொல்லால் பிறர்மனதைக் கசக்க வேண்டாம்!
...கடவுளிடம் அறமின்றி இரக்க வேண்டாம்!
செ.இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment