20/03/2025

என்னய்யா ஊரிது?

 


என்னய்யா ஊரிது?
வெத்தலை கொடுய்யான்னா
வெறிச்சில்லப் பார்க்குறாங்கே..
அதெல்லாம் விக்கிறதில்லையாம்
அது சரின்னு
அங்கே இங்கேன்னு அலைஞ்சு
ஒருவழியாக் கண்டுபிடிச்சா
வெத்தலை இருக்காமாம்; ஆனால்
சுண்ணாம்பு இல்லையாம்...
அப்புறம் எதுக்கு..வெத்தலைன்னா
சாமிக்குப் படைக்கவாம்....
அடேய் கருப்பா...
இனி உனக்கும் கிடையாதா சுண்ணாம்புன்னேன்...

அதுக்கு மக சொல்றா
ஆன்லைனில் ஆர்டர்போடவாம்...

✍️செ. இராசா

No comments: