10/03/2025

இருக்கிற வரைக்கும் இறைவன் என்பார்

 

இருக்கிற வரைக்கும் இறைவன் என்பார்
....இருப்பது போனால் இகழ்ந்திடுவார்!
வருகிற வரைக்கும் வரட்டும் என்பார்
....வருவது நின்றால் மறைந்திடுவார்!
தருகிற வரைக்கும் தருமன் என்பார்
...தருவது குறைந்தால் சபித்திடுவார்!
அருகினில் இருக்கையில் அம்சம் என்பார்
...அகன்றவர் சென்றால் அவனா..ம்பார்!
✍️செ. இராசா

No comments: