இராமன் ஆண்டாலும்
இராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லை...
என்னது கவலை இல்லையா...?!!
நோ...நோ..நோ....
#பல்லவி
இராமனா இராவணனா
யாராள வேணுமுன்னு
யார்வந்து சொல்லவேணும்
இராமனா இராவணனா
யாராள வேணுமுன்னு
நாமதான் சொல்லவேணும்....போடு
போடு போடு போடு போடு
போடும் ஓட்டப் பார்த்துப் போடு
போடு போடு போடு போடு
போதும் பழசத் தூக்கிப் போடு
இராமனா இராவணனா...
#சரணம்_1
இலவசமா தாரேன்பான் பார்த்துக்க
கடனெல்லாம் ரத்தும்பான் கேட்டுக்க
மதுக்கடைய வேணாம்பான் பார்த்துக்க
மகளிருக்கே உரிமைம்பான் கேட்டுக்க
ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சா
ஒன்றியம்பான்...
தாக்கி யாரும் அறிக்கை விட்டா
சங்கிம்பான்...
நீட்ட நீக்கப் போறதுதான்
கொள்கைம்பான்
கேள்வி கேட்டா ஒன்றியம்னு
கைகாட்டுவான்...
போடு போடு போடு போடு
போடும் ஓட்டப் பார்த்துப் போடு
போடு போடு போடு போடு
போதும் பழசத் தூக்கிப் போடு
இராமனா இராவணனா...செ. இராசா
No comments:
Post a Comment