கண்ணோடு கண்மோதும் நேரம்
விர்...ரென்று மின்சாரம் பாயும்
உன்னோடு நானில்லா நேரம்
உஷ்..சென்று புஷ்வானம் ஆகும் (2)
என் அன்பே......என் அன்பே
நீ...இல்லை.....நான் இல்லை
என் அன்பே......என் அன்பே
நீ...இல்லேல்.....நான் இல்லே..
#சரணம்_1
ஆண்:
எழுதாத காகிதமாய் இருந்த
எனது மனதில்
அழகான காவியமாய் விரிந்த
அமுதக் கவியே...
பெண்:
வரையாத சுவராக இருந்த எனது மனதில்
வடிவான உருவாக வளர்ந்த முதல் கலையே...
ஆண்:
முடியாத தொடராக தொடரும் இந்த உறவை
முடிவான உறவாக மாற்ற வேண்டும் இனிதே..
பெண்:
முடிவான உறவாக முடிச்சு மூன்று போட்டே
முடிவில்லாத் தொடராக தொடங்க வேண்டும் அன்பே...
என் அன்பே......என் அன்பே
நீ...இல்லை.....நான் இல்லை
என் அன்பே......என் அன்பே
நீ...இல்லேல்.....நான் இல்லே..செ. இராசா