கடவுள் மறுப்பாளர்
......கண்டெடுத்த பேத்தி
கடவுளாய் ஏற்றதிரு
.....கர்த்தர் - உடனிருக்க
மற்ற மதத்தவரை
......வம்பிழுக்கும் அச்செய்கை
குற்றமா இல்லையா
......கூறு?
கடவுள் மறுப்பாளர்
......கண்டெடுத்த பேத்தி
கடவுளாய் ஏற்றதிரு
.....கர்த்தர் - உடனிருக்க
மற்ற மதத்தவரை
......வம்பிழுக்கும் அச்செய்கை
குற்றமா இல்லையா
......கூறு?
பாக்க சொல்ல
.....பாசங் காட்டி உருகுறான்- தட்டிக்
கேக்க சொல்ல
......கேட்ட இழுத்து மூடுறான்!
பூவுக் குள்ள
..புயலுக் காத்தப் புகுத்துறான்-இதயத்
தீவுக் குள்ள
....தீய மூட்டி சிதைக்கிறான்!
பழச மறக்கும் உறவு- அது
பழக்கத்துக்கு எதுக்கு?
விலக நினைக்கும் உறவு - அது
விலகுமுன்னே வில(க்)கு!
ஓம் நமசிவாய
உன்முன்னே வந்தவரும் உன்னோடே வந்தவரும்
இன்றெங்கே உள்ளார் இயம்பு?
(1)
உன்பின்னே யாரென்றும் உம்மோடு யாரென்றும்
என்றறிவோர் யாரோ இயம்பு?
(2)
வந்தவர்கள் போகுமிடம் வாராதோர் வாழுமிடம்
எந்தயிடம் கண்டால் இயம்பு?!
(3)
சென்றவர்கள் சொன்னதில்லை செல்பவர்கள் சொல்லயில்லை
என்னவழி உண்டோ இயம்பு?
(4)
வந்தவரும் சென்றவரும் வந்துவந்து சென்றுவிட்டால்
தந்தவர்யார்? வாடகையைத் தா!
(5)
இந்தா எனத்திரும்பி இப்போது பார்த்தாலோ
முந்திவந்து தள்ளிவிடும் மூப்பு!
(6)
பள்ளி மறவாத பாலகனாய் நானிருக்கப்
பள்ளி முடித்தமகன் பார்
(7)
உயர்ந்த இலக்கிற்காய் ஓடுகின்ற கால்கள்
வயதை உணராது நம்பு
(8)
நீர்க்குமிழி வாழ்வில் நிஜமாக நிற்பதென்ன
பேர்சொல்லும் செய்கைதான் பேறு
(9)
வந்தபின் தங்கி மறுபடியும் போவதெனும்
மந்தை வழிமுறையை மாற்று!
(10)
காட்டில் இருந்தவனின்
பம்பாவில் அவதரித்து
உயிரணுவை ஊசிமூலம்