பம்பாவில் அவதரித்து
......பந்தளம் குடிபுகுந்து
அம்பாரி மேலவந்த ஐயப்பா-உன்னை
நம்பியவர் கெடுவதுண்டோ ஐயப்பா!
வலிக்கு மருந்தென்று
.....புலிப்பால் கொணர்ந்தன்று
புலிமேல் ஏறிவந்த ஐயப்பா-உன்னைப்
புரிஞ்சவுங்க பயந்ததுண்டோ ஐயப்பா!
சாமி சரணம் ஐயப்பா!
ஐயப்ப சரணம் ஐயப்பா!
வாழ்வு வரணும் ஐயப்பா
வணங்கும் சாமி நீயப்பா....
சாமியே ஐயப்போ
.....ஐயப்போ சாமியே
சாமியேய்...சரணமய்யப்பா
வாபரின் தோழனான
.....சாஸ்தா எங்க சாமி
ஆபத்தில் ஓடிவரும்
......ஐயா எங்க சாமி
அழுத மலையேத்தும்
.....அப்பா நம்ம சாமி
அழுத்த வினைநீக்கத்
.....தப்பாதெங்க சாமி
கரிமலை நீலிமலை
.....கடந்துவாறோம் சாமி
கருப்பண்ண சாமியையும்
.....வணங்கிவாறோம் சாமி
பதினெட்டாம் படியேறி
......பார்க்க வாறோம் சாமி
கதியத்த எங்களநீ
......காக்கவேணும் வாநீ
No comments:
Post a Comment