எப்போதும் நீயே கொடுக்கிறாயா?
கொஞ்சம் நிறுத்திப்பார்...
வள்ளல் என்ற வாயெல்லாம்
கஞ்சன் எனச்சொல்லும்!
எப்போதும் சகித்துக் கொள்கிறாயா?
கொஞ்சம் முறைத்துப்பார்..
பழகிய உறவெல்லாம்
பாடம் புகட்டிவிடும்!
எப்போதும் இயங்குகிறாயா?
கொஞ்சம் மௌனித்துப்பார்..
பாராட்டிய கூட்டமெல்லாம்
பாராமல் போகும்!
No comments:
Post a Comment