காட்டில் இருந்தவனின்
.... கால்களைக் கட்டிவைத்துக்
கூட்டில் அடைத்திடவா
...கொண்டுவந்தீர்- நாட்டமுற
என்னாசி வேண்டுகின்ற
....என்னருமை தோழர்காள்!
என்னை விடுவிப்போர்
....யார்?
சுற்றித் திரிந்த
......சுதந்திரத்தைப் பூட்டிவிட்டுக்
கற்றுக் கொடுத்தீர்
.......கலையொன்றை- அற்புதமாய்
நிற்கும் இடம்நின்றே
.......நிம்மதியாய் வாழ்வதற்கு
மற்றவர்மேல் து(ந)ம்பிக்'கை
......வை!
No comments:
Post a Comment